
தற்போது இந்தியாவில் பெரிதாக பேசப்படும் மணிப்பூர் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஒரு கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒருவர் கூட தப்ப மாட்டார்கள் என்பதை உறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மோடி […]
Continue reading …
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எந்தக் கட்சி பெரிதாக பாதிப்படையும் என்பது குறித்து கருத்துக் கணிப்பு தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஜூன் 17ம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார். இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்டது. சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் […]
Continue reading …
ரஷ்ய அரசு ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் சாதனைகளை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஏராளமானோர் ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் நிறுவனங்களின் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் மூலம் உளவு நிறுவனங்கள் சோதனை செய்யும் வாய்ப்பிருப்பதாக ரஷ்ய அரசு கூறியுள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் சாதனங்கள் மூலம் உளவு […]
Continue reading …
ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையமைக்கும் முதல் பாலிவுட் படம். இந்த படத்துக்காக அனிருத் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியளவில் ஒரு இசையமைப்பாளர் வாங்கும் அதிகபட்ச சம்பளமாகும். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியளவில் இதுவரை […]
Continue reading …
அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்ததின் முடிவில் ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று விடிய விடிய சோதனை நடந்தது. இன்று அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அதனை அடுத்தவர் அதிகாலை விசாரணை முடிந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் இந்நிலையில் இந்தோனேசியா நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் வைப்புத்தொகை தவிர பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை என்னும் பணி தற்போது […]
Continue reading …
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு காரணமாக 20 கிராமங்களில் இருக்கும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை, எம்.கரிசல்குளம், வன்னிக்குடி, சோமாத்தூர், சின்ன கண்ணனூர், புலிக்குளம், மானங்காத்தான் உள்ளிட்ட 200 கிராமங்களுக்கு அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பம்பு செட்டுகளை இயக்க முடியாமல் இருப்பதாகவும் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டுவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். வியாபாரம் […]
Continue reading …
அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் யூடியூபர் டிடிஎஃப் வாசன். அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது. வாசன் ஹீரோவாக அறிமுகமாகப் போகும் “மஞ்சள் வீரன்” திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியானது. படத்தை செல்வம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல யுடியூபரான அமலா […]
Continue reading …
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபாஸின் ரசிகர்கள் “புராஜக்ட் கே” திரைப்படத்திற்காக வித்தியாசமான முயற்சி மேற்கொண்டனர். பான் இந்திய ஸ்டாராக அறியப்படும் தெலுங்கு நடிகர் பிரபாஸின் அடுத்த படம் “புராஜக்ட் கே.” மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் “புராஜெக்ட் கே” திரைப்படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தின் […]
Continue reading …
ஜேம்ஸ் காமரூன் டைட்டானிக் படத்தை இயக்கியவர். இவர் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தையும் திரைப்படமாக எடுக்கப் போவதாக தகவல் பரவியுள்ளது. ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 110 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரம்மாண்ட கப்பலான டைட்டானிக் கடலுக்குள் மூழ்கியது. இக்கப்பல் மூழ்கிய ஆழ்கடலுக்குள் சென்று இதன் பாகங்களைக் காண்பது பலருக்கு திரிலிங்கான பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது. இதற்காக சமீபத்தில் ளிநீமீணீஸீநிணீtமீ என்ற நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டனை சேர்ந்த பணக்காரர், பாகிஸ்தானை சேர்ந்த செல்வந்தர் […]
Continue reading …
கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “தெறி” திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் வேடத்தில் வருண் தவான் நடிக்கிறார். இத்திரைப்படத்தை அட்லியின் இணை இயக்குனர்களில் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அட்லி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்தில் சமந்தா நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும் […]
Continue reading …