
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோய் கொண்டிருக்கும் நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும், “எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது, பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது, பணவீக்கம் அதிகரிக்க தமிழக அரசின் நடவடிக்கையே காரணம். உணவு பொருள் தொடர்பான பணவீக்கம் அதிகரிக்க காரணம் என்ன? என்பதை திமுக […]
Continue reading …
நடிகர் விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி” படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகவுள்ளது. விஷாலின் 34வது படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இருவரின் காம்பினேசனில் உருவான “தாமிரபரணி” படத்தை அடுத்து, ஹரி இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு விஷால், ஸ்ருதிஹாசன், ராதிகா சரத்குமார், சத்யராஜ் முகேஷ் திவாரி ஆகியோரின் நடிப்பில் வெளியானது “பூஜை” படம். அதன் பிறகு விஷால் 34 திரைப்படத்திற்கு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுகவினர்களை பொருத்தவரை இந்தி யாருக்கும் தெரியாது என்பதால் உதயநிதி போன்ற அமைச்சர்கள் ஹிந்தி தெரிந்தவர்களை உடன் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறும்போது, “பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கும் போடுவதாக பொய் தகவல்களை திமுகவினர் பரப்பி வருகின்றனர். பிரதமர் ஹிந்தியில் என்ன கூறினார் என்பது திமுககாரர்களுக்கு புரியாது. புரியாத காரணத்தினால் தான் அவர்கள் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி மற்றும் […]
Continue reading …
உதயநிதி “கல்விக்கு ஓர் கோட்டமாக ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்கள்’’ என்று தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், கூரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு […]
Continue reading …
சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமானத்தில் மாலத்தீவு சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான “லால் சலாம்“ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார். ஆகஸ்ட் 10ம் தேதி “ஜெயிலர்” திரைப்படமும் அதனை அடுத்து ஒரு சில மாதங்கள் கழித்து “லால் சலாம்” திரைப்படமும் வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் […]
Continue reading …
வீட்டில் வைத்திருந்த பிரிட்ஜ் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர். பாகிஸ்தான் நாட்டில் வடகிழக்கு மாகாணமாக பஞ்சாப்பின் தலைநகர் லாகூரிலுள்ள நூர் மெகல்லா என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. இவர்கள் வீட்டிலுள்ள பிரிட்ஜ் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிக சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அருகில் இருந்த மக்கள் […]
Continue reading …
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி தற்போது அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான நிக்ஷீணீஸீபீ சிக்ஷீஷீss ஷீயீ லிமீரீவீஷீஸீ ஷீயீ பிஷீஸீஷீக்ஷீ என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தாத திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “இனி வருங்காலங்களில், மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவும், விளைந்த பொருட்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வினை கட்டுக்குள் […]
Continue reading …
சிறுத்தை சிவா சூர்யாவின் 42வது படமான “கங்குவா” திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் தற்போது நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தை 3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில் உருவாக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்போது கொடைக்கானலில் […]
Continue reading …
ஆர்.எஸ்.எப் எனப்படும் துணை ராணுவத்தினரும் சூடான் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு படையினர் இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில் இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. இதில், பல நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூடானில் மேற்குப் பகுதியில் டார்பூரில் 87 பேரின் உடல்கள் அங்குள்ள ஒரு புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இதுபற்றி ஐ நா. சபை இது […]
Continue reading …