
நடிகர் சுனில்ஷெட்டி “தக்காளி விலை உயர்வு காரணமாக சமீப காலமாக நானும் தக்காளி சாப்பிடுவதைக் குறைந்து கொண்டேன்’’ என்று கூறியுள்ளார். இந்தி சினிமாவின் பிரபல நடிகரான சுனில் ஷெட்டி 1992ம் ஆண்டு தன் 31 வயதில் பால்வானுடன் இந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன்பின், இந்தி சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவானார். பெஹ்சான், மொஹ்ரா, சாஸ்த்ரா, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடித்துள்ளார். தமிழில் 12 பி படத்திலும், கடந்த 2020ல் ரஜினிகாந்துடன் இணைந்து “தர்பார்” படத்தில் நடித்திருந்தார். […]
Continue reading …
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீடு குற்றச்சாட்டை வைத்தார். தன்னை போல பாதிக்கப்பட்ட பல பெண்களின் மீடு புகார்களையும் தன்னுடைய டிவிட்டர் பக்கம் மூலமாக வெளியிட்டார். இவருக்கு ஆதரவாக பலரும் கருத்துகள் கூறி வந்த நிலையில் அவ்வப்போது இதுபற்றி சின்மயி தன் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார். நேற்று ஒரு நபர் டுவீட்டர் பக்கத்தில், “கவிஞர் வைரமுத்துவை உங்க கல்யாணத்துக்கு கூப்பிட்டு கால்ல விழுந்தது என்ன ரகம் தோழி?’’ […]
Continue reading …
யோகி பாபு நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சிம்புதேவன். இவர், வடிவேலுடன் இணைந்து “இம்சை அரசன் 23ம் புலிகேசி,” “அறை எண் 305ல் கடவுள்,” “இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்,” “ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்,” விஜய் உடன் இணைந்து “புலி,” “கசட தபற” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் அடுத்ததமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி […]
Continue reading …
இன்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை காலத்தை காவலாக கருத முடியாது. முதல் 15 நாட்களுக்கு பிறகு அமலாக்க துறையை காவலில் வைத்து விசாரிக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்று நீதிபதி சிவி கார்த்திகேயன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் தரப்பில் சுப்ரீம் கோர்ட் சொல்ல வாய்ப்பு இருப்பதாக […]
Continue reading …
தமிழ்நாட்டில் அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக குஜராத்தில் தொடங்கி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் பலவற்றிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன. இன்று அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அதி கனமழையும், […]
Continue reading …
சமூக வலைதளங்களில் முன்னாள் டிஜிபி ரவி பெயரில் போலி ஐடி உருவாக்கி ஆசாமிகள் மோசடி செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ளனர். அவர்களது பெயரில் புகைப்படங்களை பயன்படுத்தி போலி ஐடிக்களை உருவாக்கி நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறாக போலி ஐடி உருவாக்கும் ஆசாமிகள் ஒரிஜினல் ஐடியில் உள்ளவருடன் நட்பில் உள்ளவர்களிடம் அவர்களை போன்றே தொடர்பு கொண்டு பேசி பண மோசடி செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் உள்ளது. […]
Continue reading …
நாளை இஸ்ரோவின் ‘சந்திரயான் 3’ ராக்கெட் புறப்பட உள்ளது. இன்று அதன் மாதிரியை திருப்பதி கோவிலில் வைத்து விஞ்ஞானிகள் வழிபாடு செய்துள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் ஆகிய விண்கலங்களை ஏவி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக இஸ்ரோ நிலவு ஆராய்ச்சிக்காக அனுப்பிய சந்திரயான் 1 வெற்றிகரமாக தரையிறங்கியது. ஆனால் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க இருந்த கடைசி சில நொடிகளில் இணைப்பை […]
Continue reading …
தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார். அத்திரைப்படத்தில் அவர் வில்லன் என்று சொல்லப்படுகிறது. இத்திரைப்படம் மட்டுமில்லாமல் தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை. இப்போது அவர் நடிப்பில் கன்னடா மற்றும் […]
Continue reading …
இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். சில காலமாக நடிப்பில் ஆர்வம் காட்டிய ஜி.வி.பிரகாஷ், இப்போது மீண்டும் இசையில் அக்கறைக் காட்டத் தொடங்கி உள்ளார். அவரது கைவசம் 15க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படங்களில் பெருமளவு தெலுங்கு படங்களே. இதற்கு அவர் இசையமைத்த “வாத்தி” திரைப்படத்தின் ஹிட்டானதும் காரணமாகும். இப்போது அவரின் 100வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படம்தான் ஜி.வி.பிரகாஷின் 100வது […]
Continue reading …
நடிகர் ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது, அவர் ஷங்கர் இயக்கத்தில் “கேம்சேஞ்சர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் “வாரிசு” படத்தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரித்து வருகிறார். “உப்பென்னா” திரைப்படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை தற்போது ஸிசி16 என அழைத்து வருகின்றனர். படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக நடிக்க […]
Continue reading …