Home » Posts tagged with » Netrikkan (Page 240)

நடிகர் விஜய் குறித்து பிரபல தயாரிப்பாளர்!

Comments Off on நடிகர் விஜய் குறித்து பிரபல தயாரிப்பாளர்!

தமிழகம் முழுவதும் இரவு பாடசாலை நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வரும் 15ம் தேதி முதல் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏழை எளிய மக்கள் பள்ளிக்கு செல்ல முடியாதவர்கள் கல்வி பயில்வதற்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் என்று கூறப்பட்டது. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, “எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் […]

Continue reading …

தமன்னாவுக்கு விருது!

Comments Off on தமன்னாவுக்கு விருது!

நடிகை தமன்னாவுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, விடிவி கணேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் “கண்ணே கலைமானே.” இத்திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல்கள் எழுதியிருந்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படத்தை சர்வதேச பட […]

Continue reading …

நடிகையின் செல்போனை பறித்த நபரால் பரபரப்பு!

Comments Off on நடிகையின் செல்போனை பறித்த நபரால் பரபரப்பு!

முன்னணி நடிகையான ராஷ்மிகாவின் செல்போனை ரசிகர் ஒருவர் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கார்த்தியுடன் “சுல்தான்,” விஜய்யுடன் “வாரிசு,” அல்லு அர்ஜூனுடன் “புஷ்பா 1” ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது “புஷ்பா -2” திரைப்படத்தில் நடித்து வருவதுடன் இந்திப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் ரன்பீர் கபீருடன் இணைந்து நடித்துள்ள “அனிமல்” படம் வரும் டிசம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ளது. விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று நடிகை ராஷ்மிகா மும்பை […]

Continue reading …

“ஆர்.ஆர்.ஆர்” 2ம் பாகம் குறித்து புதிய தகவல்!

Comments Off on “ஆர்.ஆர்.ஆர்” 2ம் பாகம் குறித்து புதிய தகவல்!

இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னணி இயக்குனரான ராஜமௌலியின் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி, உள்ளிட்டோர் நடித்து கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் “ஆர்.ஆர்.ஆர்.” இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் “பாகுபலி” திரைப்பட சாதனையை முறியடித்து வசூலில் சாதனையை படைத்தது. சமீபத்தில், ஜப்பான் மொழியில், இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கும் […]

Continue reading …

368 கிராம பஞ்சாயத்தில் மம்தா கட்சி முன்னிலை!

Comments Off on 368 கிராம பஞ்சாயத்தில் மம்தா கட்சி முன்னிலை!

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்க மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் 368 கிராம பஞ்சாயத்து இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 8ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் வாக்குப்பதிவின் போது பயங்கர வன்முறை நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இவ்வன்முறையில் 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மொத்தம் உள்ள 63 ஆயிரம் கிராமத்து கிராம பஞ்சாயத்து இடங்களில் 368 இடங்களில் […]

Continue reading …

வானதி சீனிவாசன் ஆவேசம்!

Comments Off on வானதி சீனிவாசன் ஆவேசம்!

சமீபத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பதாக கூறினார். ஆனால் 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை” என்று தெரிவித்தார். அமைச்சர் உதயநிதியும், “மோடி 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறினார், ஆனால் தரவில்லை” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் வெளியிட வேண்டும். ஆதாரத்தை […]

Continue reading …

நேபாள நாட்டில் ஹெலிகாப்டர் மாயம்!

Comments Off on நேபாள நாட்டில் ஹெலிகாப்டர் மாயம்!

6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நேபாள நாட்டில் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் காத்மாண்டுவிலிருந்து 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமானது. இன்று காலையில் 10 மணிக்குத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாயமாகியுள்ள இந்த ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் ஹெலிகாப்டர் கேப்டன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளதாக நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Continue reading …

தமிழ்நாடு அமைதி பூங்கா: முதலமைச்சர் பேச்சு!

Comments Off on தமிழ்நாடு அமைதி பூங்கா: முதலமைச்சர் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை, சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். கடந்த 6 மாத குற்ற வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து […]

Continue reading …

ஓடிடியின் வருமானத்தில் பங்கு வேண்டும்; தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்!

Comments Off on ஓடிடியின் வருமானத்தில் பங்கு வேண்டும்; தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு மட்டுமல்லாமல் கோரிக்கைகள் விடுத்து, தமிழ்நாடு அரசிடம் மனு கொடுத்துள்ளது. அதன்படி திரைப்படத் தயாரிப்பாளர்களின் வேண்டுகோள், புதிய திரைப்படங்கள் வெளி வந்து 8 வாரம் கழித்து தான் ஓடிடியில் திரையிட வேண்டும். ஓடிடியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்த பிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பர போஸ்டர்ஸ்களுக்கு 1% (பப்ளிசிட்டி) நீக்க வேண்டும். புதிய திரைப்படங்களுக்கு அதிபட்சமாக 60 சதவிகிதம் தான் பங்குத் தொகையாகக் […]

Continue reading …

கலெக்டரின் வேண்டுகோள்!

Comments Off on கலெக்டரின் வேண்டுகோள்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் காட்பாடியில் உள்ள தனியார் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்ட விவகாரம் குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் அது, உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்தனர், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே, […]

Continue reading …