Home » Posts tagged with » Netrikkan (Page 241)

வெறிச்சோடி காணப்படும் உக்கடம் மார்க்கெட்!

Comments Off on வெறிச்சோடி காணப்படும் உக்கடம் மார்க்கெட்!

வெளிமாநிலங்களிலிருந்து வரவேண்டிய காய்கறிகள் கடந்த சில தினங்களாக பெய்யும் பருவமழை காரணமாக குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அது மட்டுமின்றி இஞ்சி பீன்ஸ் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போதைய விலை நிலவரத்தின் படி தக்காளி கிலோ 100 ரூபாய், ஆப்பிள் தக்காளி 120, சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய், பூண்டு […]

Continue reading …

இயக்குனரின் நன்றி டுவிட் பதிவு!

Comments Off on இயக்குனரின் நன்றி டுவிட் பதிவு!

அட்லீயின் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவான “ஜவான்” படத்தின் பிரிவியூ வீடியோ 112 மில்லியன் வியூஸ் எட்டியுள்ளதையடுத்து நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை […]

Continue reading …

நடிப்புக்கு பிரேக் விடும் பிரபல நடிகை?

Comments Off on நடிப்புக்கு பிரேக் விடும் பிரபல நடிகை?

பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான “சிட்டாடல்” தொடரின் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் அதனை சமந்தா மறுத்து தான் நடிக்கும் தொடர் ரீமேக் இல்லை என்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “சிட்டாடல்” வெப் தொடரில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளில் சமந்தா நடித்து முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் கைவசம் இருக்கும் ஒரே […]

Continue reading …

சுகாதாரத்துறை செயலாளரின் உத்தரவு!

Comments Off on சுகாதாரத்துறை செயலாளரின் உத்தரவு!

தமிழக சுகாதாரத்துறை செயலாளார் சுகன்தீப் சிங் பேடி தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7:30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் […]

Continue reading …

தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

Comments Off on தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் உள்ள காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடந்த மாதம் 22ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக […]

Continue reading …

அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

Comments Off on அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை “மதுரை உயர்நீதிமன்றம் கலைஞர் போட்ட பிச்சை” என்று தமிழக அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. “சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை” என்கிறார் அமைச்சர் எவ வேலு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று […]

Continue reading …

உயர்மட்ட பாலம் குறித்து தமிழக அரசு அரசாணை!

Comments Off on உயர்மட்ட பாலம் குறித்து தமிழக அரசு அரசாணை!

தமிழக அரசு சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மூன்றுக்கும் மேற்பட்ட சிக்னல்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூபாய் 621 கோடி பட்ஜெட்டில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த உயர்மட்ட பால திட்டத்திற்கு […]

Continue reading …

இலங்கையில் பரபரப்பு!

Comments Off on இலங்கையில் பரபரப்பு!

பெண் போராளிகளின் உடல்களுடன் மனித சடலங்கள் இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் போராளிகளின் உடைகளுடன் மனித சடலங்கள் இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் நீர் இணைப்பிற்காக கனரக இயந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டது. அப்போது, உள்ளே மனித எச்சங்கள் தென்பட்டுள்ளன. இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், பெண்களின் மேலாடை, பச்சை சீருடை, மற்றும் எலும்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Continue reading …

ஓடிடியில் சாதனை; “வீரன்” திரைப்படம்!

Comments Off on ஓடிடியில் சாதனை; “வீரன்” திரைப்படம்!

ஹிப்பாப் ஆதி, “மரகத நாணயம்” திரைப்படத்தின் இயக்குனர் ஏஆர்கே. சரவன் இயக்கத்தில் “வீரன்” திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஹிப் ஹாப் ஆதிக்கு அவர் நடிப்பில் இதற்கு முன்பாக ரிலீசான படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. காமெடி பேண்டசி திரைப்படமான இத்திரைப்படம் ஜூன் 2ம் தேதி ரிலீசாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. இப்போது படம் ரிலீசாகி ஒரு மாதமாகி தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. ஜூன் 30ம் தேதி முதல் “வீரன்” திரைப்படம் […]

Continue reading …

“லியோ” படக்குழு மீண்டும் காஷ்மீர் பயணம்!

Comments Off on “லியோ” படக்குழு மீண்டும் காஷ்மீர் பயணம்!

விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டூடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் 60 நாட்களுக்கு மேல் படமாக்கினர். பின்னர் இப்போது சென்னையில் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ். இப்போது […]

Continue reading …