Home » Posts tagged with » Netrikkan (Page 258)

அதிமுக வழக்கறிஞரின் வேண்டுகோள்

Comments Off on அதிமுக வழக்கறிஞரின் வேண்டுகோள்

அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மனித உரிமை ஆணையர் கண்ணதாசனின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ரவி மற்றும் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் திமுகவின் அனுதாபி, அவர் திமுகவுக்கு ஆதரவாக பல தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர், அவரது அறிக்கை திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் என்று பலர் கூறிவருகின்றனர். அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் அதே கருத்தை […]

Continue reading …

சினிமாவில் பாரபட்சம் பற்றி நடிகையின் பேட்டி

Comments Off on சினிமாவில் பாரபட்சம் பற்றி நடிகையின் பேட்டி

நடிகை அவிகா கவுர், “சினிமாவில் பாரபட்சமாக நடந்துக் கொள்கிறார்கள். தென்னிந்திய ரசிகர்கள் இதைப் பார்ப்பதில்லை” என்று கூறியுள்ளார், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபலமான நடிகை அவிகா கவுர். இவர், தெலுங்கு சினிமாவில் “உய்யல ஜம்பாலா” படம் மூலம் அறிமுகமானவர். இவர் தெலுங்கில் நடித்த படங்கள் பெரியளவில் போகவில்லை. எனவே மும்பைக்கு குடிபெயர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தினார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து […]

Continue reading …

“மாமன்னன்” டிரெயிலர் ரிலீஸ் எப்போது?

Comments Off on “மாமன்னன்” டிரெயிலர் ரிலீஸ் எப்போது?

“மாமன்னன்” திரைப்படம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது. படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் “கர்ணன்” படத்துக்குப் பிறகு இயக்கிவுள்ளார். சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. படம் பக்ரீத் பண்டிகையன்று ஜூன் 29ம் தேதி ரிலீசாக வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே […]

Continue reading …

சிறை அதிகாரிகளின் தகவல்!

Comments Off on சிறை அதிகாரிகளின் தகவல்!

சிறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண்ணை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புழல் சிறையிலிருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும், அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் நடிப்புக்கு விருது கொடுக்கலாம்: ஜெயக்குமார்

Comments Off on செந்தில் பாலாஜியின் நடிப்புக்கு விருது கொடுக்கலாம்: ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட உடனே அமைச்சர் செந்தில் நெஞ்சுவலி என்று கூறியதா£ல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் “30 சதவீதம் அடைப்பிற்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான். இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் […]

Continue reading …

பாஜக அரசை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Comments Off on பாஜக அரசை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளையே தொடங்காதப் பற்றி பேசினார். சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உரையாற்றினார்.அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கருணாநிதி என்றாலே கிங் தான். கிண்டில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு கலைஞர் பெயர் தான் பொருத்தம். வாழ்ந்த காலம் முழுவதும் […]

Continue reading …

எங்கே அழைத்து சென்றனர் அமலாக்கத்துறை?

Comments Off on எங்கே அழைத்து சென்றனர் அமலாக்கத்துறை?

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரை அழைத்துச் சென்றதாகவும், அவர்களை எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவில்லை என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய ராணுவத்தின் துணை ராணுவ படையினர் பாதுகாப்பிற்கு இருக்கின்றனர். இந்நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவல் சார் உதவியாளர் விஜயகுமாரை அமலாகத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. […]

Continue reading …

கைதிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய தயாரிப்பாளர்

Comments Off on கைதிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய தயாரிப்பாளர்

விடுதலை செய்யப்பட்ட தமிழக அரசியல் கைதிகளுக்கு லைகா குழுமத்தின் நிறுவனரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் ரூ.25 லட்சம் பணத்தை வழங்கியுள்ளார் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லைகாவின் நிறுவனர் மற்றும் தலைவர் சுபாஸ்கரன். இவர், “கத்தி,” “எந்திரன் -2,” “பொன்னியின் செல்வன்- 1, 2” ஆகிய பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். லைகா குழுமத்தின் நிறுவனரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் ரூ.25 லட்சம் பணத்தை விடுதலை செய்யப்பட்ட தமிழக […]

Continue reading …

பத்திரிகையாளர் மணியின் விளக்கம்

Comments Off on பத்திரிகையாளர் மணியின் விளக்கம்

பத்திரிகையாளர் மணி ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரும் சிறைக்குத்தான் போயிருப்பார் என பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கான பேட்டியளித்த பத்திரிக்கையாளர் மணி, “சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்ட காரணத்தினால் அவருடன் வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் சிறை சென்றார்கள். இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக கோஷம் விட்டு வருகின்றனர். அண்ணாமலை கூறியதில் எந்த தவறும் இல்லை, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முதலமைச்சர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது […]

Continue reading …

சோதனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்!

Comments Off on சோதனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்!

“அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது, அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது” என அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த […]

Continue reading …