
தலைநகரம் திரைப்படம் 2006ம் ஆண்டு சுந்தர் சி நடிகராக அறிமுகமானது. இதையடுத்து 17 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டே நடந்து முடிந்தது. இப்போது படத்தின் டிரெயிலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக டிரெயிலரைப் பார்க்கும் போது தெரிகிறது. படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில், பேசிய சுந்தர் சி “இயக்குனர் துரையோடு நான் இணைந்து பணியாற்றிய இருட்டு திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த […]
Continue reading …
நடிகர் அர்ஜுன் தாஸ் “கைதி” திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியவர். பின் “மாஸ்டர்” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த “அந்தகாரம்” திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் ரிலீசான “விக்ரம்” திரைப்படத்தில் கூட அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது வசந்தபாலன் இயக்கும் “அநீதி” படத்தில் கதாநாயகனாகவும் நடித்து முடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அஜித்தின் விடாமுயற்சி […]
Continue reading …
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார். உதயநிதி அவரது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும், இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும், இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும் & என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உதட்டளவில் தமிழ், தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று […]
Continue reading …
நடிகை குஷ்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிங்கம் என்றும், அவர் உண்மையைத்தான் பேசுவார் என்றும் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில், “தி டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது, ஊழல்வாதி என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது வன்மத்தைக் கக்கியுள்ள அண்ணாமலையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவைத் தேடி போயஸ் கார்டனுக்கு மோடி, அருண்ஜெட்லி உள்ளிட்டோர் வரிசையாக காத்திருந்தனர். கடந்த 2014ம் […]
Continue reading …
“வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் தனுஷூடனும், அரவிந்த்சாமி, பிரபுதேவாவுடன் “மின்சார கனவு,” உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை கஜோல். தற்போது 48 வயதாகும் கஜோல் இன்னும் பாலிவுட்டில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 1999ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கஜோல், டுவிட்டரில் “இப்போது வாழ்க்கையில் மிக கடினமான நேரத்தை எதிர்கொண்டு இருப்பதால் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி […]
Continue reading …
நடிகர் விஜய்யின் “லியோ” படத்தின் ப-ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர். காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது யாரும் எதிர்பார்க்காத நடிகை ஒருவர் “லியோ” படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
Continue reading …
மணமகன் கருப்பாக இருந்ததால், நடக்கவிருந்த திருமணத்தையே நிறுத்தியுள்ளார் மணமகள். உத்தரபிரதேச மாநிலத்தில் கவுசாம்பி மாவட்டத்தில் பிப்ரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஷெர்பூரில் கடந்த மே 29ம் தேதி ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் இருவீட்டு தரப்பிலும் ஜோராக நடந்து கொண்டிருந்தது. திருமண நாளின்போது மாப்பிள்ளை தன் உற்றார் உறவினர்களுடன் பெரிய ஊர்வலமாக பெண்ணின் வீட்டிற்கு வந்தார். மணமகனுக்கு மாலை அணிவிக்க மணமகள் திருமண மேடைக்கு வந்தார். அப்போது, மணமகனுக்கு மாலை அணிவிக்க மணப்பெண் மறுத்துவிட்டார். அவர் […]
Continue reading …
மதுபோதையில் 7வது மாடியிலிருந்து கீழே விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் நவி மும்பையை சேர்ந்த 20 வயது இளம்பெண் கடந்த புதன்கிழமை மாலை தன் நண்பர்களுடன் சேர்ந்து பில்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றுள்ளார். அங்கு, நண்பர்களுடன் இணைந்து இளம்பெண்ணும் மது பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அனைவரும் மதுபானம் குடித்து வந்த நிலையில், இளம்பெண் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே […]
Continue reading …
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தமிழகத்தில் பைட் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என உறுதிப்பட கூறியுள்ளார். பைக் டாக்ஸிகள் தமிழகத்தில் தனியார் நிறுவனங்களினால் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது பணம் தேவைப்படுபவர்கள் தங்கள் சொந்த இரு சக்கர வாகனங்களையும் தனியார் நிறுவனத்துடன் இணைத்து பைக் டாக்ஸியாக இயக்கி வருகின்றனர். ஆட்டோ மற்றும் டாக்ஸிகளின் கட்டணத்தை விட பைக் டாக்ஸி கட்டணம் குறைவு என்பதால் பலர் பைக் டாக்ஸிகளை பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் […]
Continue reading …
சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. “மாஸ்டர்” படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு என்பது உச்சகட்டமாக உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. படத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட பன்மொழி நட்சத்திரங்கள் நடித்து […]
Continue reading …