
டாஸ்மாக் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்தனர். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மயிலாடுதுறை அருகே இருவர் மதுபானம் குடித்த நிலையில் அவர்கள் குடித்த மதுபானம் பரிசோதனை செய்யப்பட்டது. கெமிக்கல் பரிசோதனை செய்ததில் மதுவில் சயனைடு கலந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விளக்கமளித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று மாலைக்குள் வந்து விடும் என்றும் அதன் பிறகு இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் […]
Continue reading …
பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் (35) மேற்கு வங்க மாநிலத்தில், வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபியா பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டில் அவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் தன் தாயாரை கத்தியால் குத்திக் கொன்றார். அதன்பின்னர், தாயாரின் உடலை சூட்கேசில் அடைத்து, போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றுள்ளார். அந்த சூட்கேசை திறந்து பார்த்த போலீசார் அப்பெண்ணிடம் இதுபற்றி விசாரணை நடத்தி கைது செய்தனர். அப்பெண் கூறியதாவது: “தனக்கு திருமணமாகி கணவர் இருக்கிறார். சம்பவத்தன்று […]
Continue reading …
நடிகர் சூர்யா ஜிவி பிரகாஷ்குமாரின் “கள்வன்” திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி.பிரகாஷ்குமார் நடித்துள்ள திரைப்படம் “கள்வன்.” படத்தை அறிமுகம் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம்தான் “பேச்சிலர்,” “ராட்சசன்” ஆகிய படங்களைத் தயாரித்திருந்தது. “கள்வன்” படஷூட்டிங் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில், இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். அதன்பின்னர் இப்படத்தின் டீசர் வெளியாகி […]
Continue reading …
நடிகர் சூர்யாவின் நடிப்பில், “சூரரைப் போற்று,” “ஜெய்பீம்,” “எதற்கும் துணிந்தவன்” ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடித்து வரும் படம் “கங்குவா.” இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவன் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் யோகி பாபு, திஷா பத்தானி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யாவின் 44வது படம் பற்றிய தகவல் வெளியாகவுள்ளது. இப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா […]
Continue reading …
சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடிகர் விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. “லியோ” படத்தில் 2 ஆயிரம் டான்ஸர்கள் பங்கேற்று ஆடிய பிரமாண்ட பாடல் காட்சி சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், இப்பாடல் காட்சி 11ம் தேதியுடன், சஞ்சத் தத் தன் பாடிகார்டுகளுடன் நடந்து வருவதுடன், அப்போது, […]
Continue reading …
அதிமுக கட்சியின் ஐடி விங் டுவிட்டர் பக்கத்தில், “எங்கள் ஆட்சியில் அதிகாரி அறையில் சோதனை, உங்கள் ஆட்சியில் அமைச்சரின் அறையில் சோதனை நடைபெறுகிறது” என பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்து குறிப்பிடப்பட்ட பதிவில், “அதிமுக ஆட்சியில் மேடை தோறும் தலைமை செயலகத்தில் நடந்த ரெய்டு குறித்து வீராவேசமாக முழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! எங்கள் ஆட்சியிலாவது தலைமை செயலகத்தில் அதிகாரியின் அறையில்தான் வருமான வரித்துறை சோதனை நடந்தது, ஆனால் இன்று உங்கள் ஆட்சியில் உங்கள் அமைச்சரின் அலுவலகத்திலேயே சட்டத்துக்கு […]
Continue reading …
எடப்பாடி பழனிசாமி “சமூகநீதிக்கு எதிரான இந்த திமுக அரசிடமிருந்து இளைய சமுதாயத்தை காத்து, அவர்களின் எதிர்காலத்தை சீர்படுத்தி குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் உறுதியேற்போம்’’ என்று தெரிவித்துள்ளார். இன்று குழந்தைத் தொழிலாளார் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படை உரிமையான கல்வி விளையாட்டு மற்றும் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையை […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பள்ளி குழந்தைகளுக்கு உப்புமா, சிறை கைதிகளுக்கு சிக்கன்: இதுதான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி ஒன்றின் போது, “திமுக எப்போது வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ண தொடங்கிவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனால் தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் கிடைக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதாக முதலமைச்சர் கூறிய நிலையில் திமுக அரசு சத்து இல்லாத […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீன முறையில் விரிவுபடுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் போது மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பசுமைத்தாயகம் என்ற அமைப்பு முறையீடு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் […]
Continue reading …
பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்தது. விசாரணையின் முடிவில் அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது, பிப்ரவரி 18ம் தேதி நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஆனால், மார்ச் 30ம் தேதிதான் புகாரளிக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் கழித்து புகாரளித்தது குறித்து போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். மேலும் நகைகள் திருட்டு என பொய் புகாரளிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரிக்க […]
Continue reading …