
மின்சார ரயில்களின் நேரங்களில் மாற்றம் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் வழியில் ரயில் தளவாட பராமரிப்பு பணிகள் காரணமாக நேரத்தில் மாற்றம் மற்றும் பகுதியாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, மூர் மார்க்கெட்டிலிருந்து ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மின்சார ரயில் ஜூன் 7,8 மற்றும் 9ம் தேதிகளில் முழுமையாக ரத்து. சென்னை பீச்சிலிருந்து அரக்கோணம் […]
Continue reading …
டிடிவி தினகரன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கை வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாவது சிப்காட் அமைக்க சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தங்களது வாழ்வாதாரத்தின் ஆதாரமாக விளங்கும் விவசாய நிலங்கள் பறிபோன கவலையில் உண்ணாவிரதம் இருந்த […]
Continue reading …
காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் “லியோ” திரைப்படத்தின் முக்கியக் காட்சிகளைக் படமாக்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என தெரிகிறது. அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீசாகிறது. “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில் படத்தின் வியாபாரம் ஜரூராக நடந்து வருகிறது. ரிலீஸுக்கு முன்பே இந்த படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது […]
Continue reading …
ஒரு கிராமத்துக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் பலியான சம்பவம் நைஜீரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய பல குழுவினர் அரசுக்கும், மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வடமேற்கு மாகாணமான சொகோடாவில் உள்ள ராக்கா, டபாகி உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தி, அப்பாகி மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து போலீசார் […]
Continue reading …
ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் நுகர்வோர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் மின் கட்டண உயர்வு மட்டுமே ஒரே வழி என்று கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கி உள்ள அனுமதியின்படி அடுத்த மாதம் முதல் மின் கட்டண உயர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை மாதம் 18ம் தேதி மின்சார […]
Continue reading …
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 275 பேர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் இன்னும் நூற்றுக்கும் மேலானவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்தில் ஒரு சில பயணிகள் மின்சாரம் தாக்கி உயிர் இழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் தென்படவில்லை என்றும் தெரிய […]
Continue reading …
திரையரங்கிற்கு மக்கள் வருவது கடந்த வாரம் குறைந்துள்ளது. கடந்த வாரம் தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் ரிலீசாகின. ஆனால் எந்த படமும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதில் மாஸ் ஹீரோ, மாஸ் இயக்குனர் என பெரிய பட்ஜெட்டில் ரிலீசான படம்தான் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்.” “விருமன்” வெற்றிக்குப் பின் இயக்குனர் முத்தையா ஆர்யாவை கதாநாயகனாக்கி இந்த படத்தை இயக்க, ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் கடந்த வாரம் ரிலீசானது. மிகப்பெரிய […]
Continue reading …
கூகுளின் முன்னாள் சிஇஓ எரிக் ஷ்மிட் உலகம் முழுதும் கிமி எனப்படும் Artificial Intelligenceன் வளர்ச்சி அதிகமாக உள்ளதால், ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரித்துள்ளார். தற்போதைய தொழில்நுட்ப உலகில் AI டெக்னாலஜியின் தாக்கம் அதிகரித்துள்ளது. Open AI வெளியிட்டChatGPT மற்றும் கூகுள் வெளியிட்டுள்ள BARD என நாளுக்கு நாள் புதுப்புது கிமி தொழில்நுட்பங்கள் மக்களிடையே பிரதான முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. கோப்புகள், ஆவணங்கள் எழுதுவது தொடங்கி, புகைப்படம் எடிட் செய்தல், வீடியோ உருவாக்குதல் என அசுர வேகத்தில் வளர்ந்து […]
Continue reading …
ஜூலை மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2026 – 27ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவாக இருந்து வரும் நிலையில் இந்த முடிவிலிருந்து விலக்கு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மின்சார கட்டணத்தை ஜூலை […]
Continue reading …
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகள் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7ம் தேதி அதாவது வரும் புதன்கிழமை திறக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் மே மாதம் போலவே ஜூன் மாதமும் கடுமையான வெயில் அடித்து வருவதால், பள்ளிகள் திறப்பதை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனவே பள்ளிகள் மேலும் ஒரு வாரம் திறப்பது ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பள்ளி […]
Continue reading …