
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னையின் பல இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பேட்டியளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ள இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு மின்விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 4016 மெகாவாட் ஆக மின் நுகர்வு அதிகரித்துள்ளது. 45 நாட்களில் 19,387 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது, […]
Continue reading …
பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவி ஒருவர் மனவிரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறவில்லை என்ற காரணமாக திருவள்ளூரை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக மனவிரக்தியில் இருந்துள்ளார். அவர் பிளஸ் டூ தேர்வில் 600க்கு 430 மதிப்பெண் பெற்றுள்ளார். 500க்கு மேல் அவர் எதிர்பார்த்ததாகவும் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றறு கூறப்படுகிறது. திடீரென குறைந்த மதிப்பெண்ணால் […]
Continue reading …
6 நாட்களில் உலகின் 7 அதிசயங்கள் என வர்ணிக்கப்படும் 7 பகுதிகளை பிரிட்டனை சேர்ந்தவர் சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பண்டைய மக்களால் உலகம் முழுவதிலும் உருவாக்கப்பட்ட ஏராளமான கட்டிட, கட்டுமான அதிசயங்கள் உள்ளன. அவற்றில் உலகின் 7 அதிசயங்களாக இந்தியாவில் உள்ள தாஜ்மஹால், சீன பெருஞ்சுவர், இத்தாலியில் உள்ள கொலிஜியம், ரியோவில் உள்ள இயேசு சிலை, பெரு நாட்டில் உள்ள மச்சுபிச்சு, மெக்ஸிகோவில் உள்ள சிச்சென் இட்ஸா மற்றும் ஜோர்டனில் உள்ள பெத்ரா ஆகிய […]
Continue reading …
கதிர் அடிக்கும் மெஷின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மாணவி அதில் சிக்கி பலியாகி உள்ளார். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்துள்ள கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்கதிர்கள் அறுவைக்கு தற்போது அறுவடைக்குத் தயாராகி வருகிறது. இதனால், அப்பகுதியில் கதிர் அடிக்கும் இந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. கேத்திரப்பட்டி அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி. இவரது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி, தன் மாமா சக்திவேல் தோட்டத்தில் ராகி கதிர் […]
Continue reading …
கடந்த 10ம் தேதி 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்று வருகிறது. இன்றைய வாக்கு எண்ணிக்கையின் படி காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 66 இடங்களிலும், மஜத 19 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. எனவே, காங்கிரஸ் 135 உறுப்பினர்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியாகி […]
Continue reading …
மாற்று மதத்தைச் சேர்ந்த தோழியை பைக்கில் அழைத்துச் சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பிர்பஹூரி பகுதியில் வசிக்கும் சாகர் குமார் மிஸ்ரா கல்லூரியில் படித்து வருகிறார். தன்னுடன் படித்து வரும் தோழியை நேற்று மாலை தன் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர் மிஸ்ரா, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தோழியுடன் பைக்கில் சென்றபோது, அப்பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர் சிலர், இருவரையும் […]
Continue reading …
சிஎஸ்கே நிர்வாகம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போது, போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. டிக்கெட்டுகளை ஏற்கனவே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி அதிக விலைக்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள […]
Continue reading …
லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் “லியோ” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இப்போது சென்னையில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை முடித்ததும், அடுத்தப்படத்திற்கான ஒப்பந்தத்தில் விஜய் கையெழுத்து போட்டுவிட்டாராம். வெங்கட் பிரபு, விஜய்யின் அடுத்த படமான “தளபதி 68” படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூ.125 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம். விரைவில் இப்படத்திற்கான […]
Continue reading …
கேரளாவில் சமீபத்தில் பெண் டாக்டர் நோயாளி போல் வந்தவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள மாநில அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. எர்ணாகுளத்தில் பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரளா மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தில் […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அதிகாரிகள், போலீசாருக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இவர் இன்று மானாமதுரையில் செய்தியாளர்களிடம், “போலீசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே தெரியாமல் இருந்தால் ஒரே நாளில் கள்ளச்சாராயம் விற்ற 1500 பேரை எப்படி கைது செய்திருக்க முடியும். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் தான் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வாங்குவது தவறில்லை. பாஜக வெற்றி பெற்றால் தேசியவாதம் ஜெயித்தது, மற்ற கட்சி […]
Continue reading …