
நடிகர் அஜீத் நடிக்கும் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கான வேலைகளில் மகிழ் திருமேனி முனைப்புடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் “விடாமுயற்சி” என அஜீத்தின் ராசியான எழுத்தான “க்ஷி” லெட்டரில் துவங்குகிறது. இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் […]
Continue reading …
“பர்ஹானா” திரைப்படத்தின் காட்சிகள் திருவாரூரில் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளன. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் “பர்ஹானா.” இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன. சமீபத்தில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “இந்த படம் இஸ்லாமியர்கள் பயப்படும் படியாக இல்லாமல், கொண்டாடும் விதமாக இருக்கும்” எனக் கூறியிருந்தார். “பர்ஹானா” திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், திருவாரூரில் இப்பட காட்சிகள் ரத்து […]
Continue reading …
அமெரிக்க இளைஞர் ஒருவர் பெட்ரோல் போடாமல் பீர் ஊற்றினால் ஓடும் பைக்கை கண்டுபிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மின்னசொட்டா என்ற மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் எரிவாயு இயங்கும் இயந்திரத்துக்கு பதிலாக பீர் ஊற்றும் பைக்கை கண்டுபிடித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, “பீர் ஊற்றினால் பைக்கின் இயந்திரம் வெப்பம் அடையும், அதில் ஏற்படும் நீராவி மூலம் பைக் இயங்கும். இந்த பைக்கில் உள்ள இயந்திரத்தில் பீரை ஊற்றும்போது 300 […]
Continue reading …
ஸ்காட்லாந்து அரசு உலகின் முதல் ஓட்டுனர் இல்லாத பேருந்தை இயக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த பேருந்து பயணிகளுக்காக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இல்லாத கார்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் இல்லாத பேருந்து முதல் முறையாக ஸ்காட்லாந்து நாட்டில் இயக்கப்பட இருப்பதாக அந்நாட்டின் பேருந்து நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார். தானியங்கி பயணிகள் பேருந்துகள் இயக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை எனவும், சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த பேருந்துகள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படுவது குறித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார். விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக பல காலமாகவே பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் அதை நோக்கியே உள்ளதாக தெரிகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் […]
Continue reading …
தனியார் தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தீம் பார்க்குகளுக்கு அழைத்து செல்லத் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் மல்லூரியில் ஒரு தனியார் தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் எருமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சௌடேஸ்வரன் கோடை விடுமுறைக்காக தன் குடும்பத்தினருடன் இந்த தீம் பார்க் சென்றுள்ளார். அப்போது, நீச்சல் […]
Continue reading …
சென்னை ஐஐடி இந்தியாவில் முதல் முறையாக மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் நான்காண்டு பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதுதான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் படிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐஐடியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான பல்வேறு துறைகள் இயங்கி வரும் நிலையில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப துறையில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதல் முறையாக மருத்துவம், தொழில்நுட்பத்தில் பிஎஸ் என்ற நான்காண்டு பட்டப்படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. மருத்துவமனை தொழில்நுட்பம் […]
Continue reading …
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை தண்டிக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “உலகம் வணங்கும் ராமர், சீதை குறித்து இழிவாக பேசியவரை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டாள், முருகன் பற்றி அவதூறாக பேசியவர்கள் கூட கைது செய்யப்படவில்லை. ஹிந்து கடவுளை இழிவாக பேசுபவர்களால் தமிழக முதலமைச்சருக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும். அவ்வாறு பேசுபவர்களை குண்டல் சட்டத்தில் கைது […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண மண்டபம் கட்டும் முடிவை மாநகராட்சி கைவிட உடனே உத்தரவிட வேண்டும் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். சென்னை, திருவல்லிகேணியில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டும் முடிவை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து, டிடிவி தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய பள்ளிக்கட்டடம் கட்டப்படும் வரை, தற்காலிக ஏற்பாடாக அருகில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் மாற்றப்படுவதாக கல்வித்துறை சார்பில் கூறப்பட்டது. அங்கு திருமண மண்டபம் கட்டப்பட […]
Continue reading …
இலவச புரமோஷனாக அமைந்துள்ளது “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு பலதரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகள். இதையடுத்து இத்திரைப்படத்திற்கு வட மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளதால், நாளை முதல் 37 நாடுகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படத்தை பற்றி பிரதமர் மோடி பெருமையாக பேசியது பல நாடுகளில் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது. இதையடுத்து இப்படத்தை 37க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இந்த படத்தின் தயாரிப்பாளர் […]
Continue reading …