Home » Posts tagged with » Netrikkan (Page 301)

ஆளுநரின் ரம்மி தடைக்கான விளக்கம்!

Comments Off on ஆளுநரின் ரம்மி தடைக்கான விளக்கம்!

ஆளுநர் ரவி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு விளக்கமளித்துள்ளார். ஆனால் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் மசோதா தடை மசோதா கடந்தாண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவை ஆறு மாதங்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அந்த மசோதாவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று அறிவுறுத்திருந்தார். இரண்டாவது முறையாக மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு […]

Continue reading …

கருணாநிதியின் பேச்சை சுட்டிக்காட்டிய முதலமைச்சர்!

Comments Off on கருணாநிதியின் பேச்சை சுட்டிக்காட்டிய முதலமைச்சர்!

சென்னை பல்லாவரத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்ற புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். 2 நாள் சுற்றுப்பயண தென்மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரமர் மோடி. இன்று சென்னைக்கு விமான நிலைய புதிய முனையம், சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு […]

Continue reading …

பிரபல நடிகை பன் டாக்!

Comments Off on பிரபல நடிகை பன் டாக்!

ரஜினியுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்குச் சம்பளம் வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தி சினிமாவில் ஆஹா லைப், சாமந்த், ரத்த சரித்ரா, ரத்த சரித்ரா 2, தோனி, அந்தாதூன், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “கபாலி” படத்திலும், கார்த்தியுடன் இணைந்து “ஆல் இன் ஆல் […]

Continue reading …

பாதிரியார் மீது மேலும் ஒரு பாலியல் புகார்!

Comments Off on பாதிரியார் மீது மேலும் ஒரு பாலியல் புகார்!

சமீபத்தில் கன்னியாகுமரி பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால், மேலும் ஒரு கல்லூரி மாணவி பாதிரியார் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளதை அடுத்து அவர் மீது ஆறு பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோ கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றி வந்தார். இளம்பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் பழகி ஆபாசமாக புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதாகவும் செய்திகள் […]

Continue reading …

“விடுதலை” படத்தை பாராட்டி ரஜினிகாந்த் டுவீட்!

Comments Off on “விடுதலை” படத்தை பாராட்டி ரஜினிகாந்த் டுவீட்!

வெற்றிமாறன் இயக்கி சமீபத்தில் திரையரங்குகளில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது “விடுதலை” திரைப்படம். இத்திரைப்படத்திற்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நேற்று இத்திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். திரைப்படத்தைப் பார்த்துள்ள நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் படத்தைப் பற்றி டிவிட்டரில் “விடுதலை… இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு பிரமிப்பு. இளையாராஜா இசையில் […]

Continue reading …

விஜய் பட நடிகைக்கு பிடிவாரண்ட் உத்தரவு!

Comments Off on விஜய் பட நடிகைக்கு பிடிவாரண்ட் உத்தரவு!

“புதிய கீதை” திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்தவர் அமீஷா பட்டேல். இவர், இந்தி, தெலுங்கு சினிமாவிலும் நடித்திருக்கிறார். குணால் குமாருடன் இணைந்து அமீஷா பட்டேல் இந்தி படமொன்று தயாரிக்கவுள்ளதாகக் கூறி அஜய்குமார் சிங்கிடம் ரூ.2.5 கோடி கடன் பெற்றார். இக்கடனை திரும்பக் கொடுக்கவில்லை என்பதால், அஜய்குமார் தான் கொடுத்த கடனை கேட்டுவந்துள்ளார். அப்போது, நடிகை அமீஷா பட்டேல் ரூ.2.5 கோடிக்கான இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார். காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, பணமின்றித் திரும்ப வந்தது. இதையடுத்து, […]

Continue reading …

அண்ணாமலை பரிந்துரைதான் காரணம்; மத்திய அமைச்சர் தகவல்!

Comments Off on அண்ணாமலை பரிந்துரைதான் காரணம்; மத்திய அமைச்சர் தகவல்!

இன்று காலை காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதால்தான் இந்த திட்டத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தேன் என கூறியுள்ளார். காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டப்படும் என்பதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என […]

Continue reading …

எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று!

Comments Off on எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று!

எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னால் நாடு முழுவதும் 1500 என்ற கணக்கில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது ஐயாயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. திருவள்ளூர் எம்.பி.ஜெயக்குமார் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற […]

Continue reading …

பிரதமர் மோடி சென்னை வருகை!

Comments Off on பிரதமர் மோடி சென்னை வருகை!

பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ள அவர் “தமிழ்நாட்டு மக்களையும், சென்னையையும் நேசிக்கிறேன்’’- என்று பேசியுள்ளார். தமிழகம் வந்த பிரதமர் மோடியை பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, முதல்வர் முக.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். அங்கு, ரூ.1260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, ஐ.என்.எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்தில் […]

Continue reading …

பாராட்டு மழையில் நனையும் கௌதம் கார்த்திக்!

Comments Off on பாராட்டு மழையில் நனையும் கௌதம் கார்த்திக்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரின் முதல் படத்தை பொன்குமார் இயக்கியுள்ளார். வரலாற்று திரைப்படமான இதற்கு ‘1947 ஆகஸ்ட் 16’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். 1940களில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீசான படம், பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கடந்த வாரம் “பத்து தல” திரைப்படம் வெளியானது. இப்போது இத்திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளதால், கௌதம் கார்த்திக் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

Continue reading …