Home » Posts tagged with » Netrikkan (Page 314)

கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கி கோழிகள் உயிரிழப்பு!

Comments Off on கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கி கோழிகள் உயிரிழப்பு!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தருமபுரியில் தனியார் கோழிப் பண்ணையில் மின்னல் தாக்கியதில், 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் பெய்த மழையின்போது, மின்னல் தாக்கியதில், சிட்டிலிங் அடுத்த மலைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் தீப்பிடித்தது. மின்னல் தாக்கி திடீரென்று தீப்பிடித்ததில், இதில் தீ கோழிப்பண்ணை முழுவதும் பரவியது. இதில், கோழிப்பண்ணையில் […]

Continue reading …

பிரேக் அப்புக்கு ரூ.33 கோடி ஒதுக்கிய அரசு!

Comments Off on பிரேக் அப்புக்கு ரூ.33 கோடி ஒதுக்கிய அரசு!

ரூ.33 கோடியை பிரேக் அப் ஆன காதலர்களுக்கு கவுன்சிலிங்கிற்கு ஒதுக்கி உள்ளது நியூஸிலாந்து அரசு. காதலிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் காதல் தோல்வியடைந்தால் மனமுடைந்து விடுகின்றனர். இதனால் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர். காதல் தோல்வியடைந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கவுன்சிலிங் செய்வதற்காக லவ் பெட்டர் என்ற பிரச்சாரக் குழுவை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு 33 கோடி ஒதுக்கி உள்ளது. காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் வர ஆலோசனை வழங்குவது, இளைஞர்களை […]

Continue reading …

நடிகை சாயிஷா சிம்புவிற்காக ஆடிய டான்ஸ்!

Comments Off on நடிகை சாயிஷா சிம்புவிற்காக ஆடிய டான்ஸ்!

நடிகை சாயிஷா சிம்புவின் திரைப்படத்திற்காக தான் டான்ஸ் ஆடியதை குறித்து மனம் திறந்துள்ளார். பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. இவர் “கஜினிகாந்த்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் இருக்கிறார். குழந்தை பிறப்புக்கு பின்னர் சில வருடம் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார் சாயிஷா. தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள “பத்து தல” படத்தில் “அடாவடி” என்ற ஐட்டம் பாடல் ஒன்றிற்கு ஆடியுள்ளார். இதை குறித்து சமூகவலைதளங்களில் […]

Continue reading …

இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்?

Comments Off on இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்?

ஓடிடியில் ஒவ்வொரு வாரமும் தமிழ் படங்கள் உட்பட பல மொழிப்படங்களும் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு வாரமும் சுமார் பத்து படங்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வகையில், பதான்: ஷாருக்கான் நடித்த படம் அமேசானில் ரிலீசாகிறது. பகாசூரன்: மோகன் ஜி இயக்கிய இந்த படம் அமேசானில் வெளியாகிறது. ரிலீஸ் ஹண்ட்டர் இந்தி வெப்தொடர் அமேசானில் ரிலீசாகிறது. செங்களம் என்ற தமிழ் வெப்தொடர் ஜீ5 சேனலில் ரிலீசாகிறது. […]

Continue reading …

‘விடுதலை’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

Comments Off on ‘விடுதலை’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

இம்மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளிவர தயாராக இருக்கும் “விடுதலை” திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெற்றிமாறனின் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்த நிலையில் சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதால் 18 வயது உட்பட்டோர் திரையரங்குகளில் இத்திரைப்படத்தை பார்க்க முடியாது. அது மட்டுமின்றி இந்த படத்தை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப அனுமதி […]

Continue reading …

அவசரமாக டில்லி சென்ற கவர்னர்!

Comments Off on அவசரமாக டில்லி சென்ற கவர்னர்!

தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா இயற்றப்பட இருப்பதையடுத்து அவசரமாக டில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் 6 மாதம் கழித்து இந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை இன்று மீண்டும் சட்டப்பேரவையில் இயற்ற போவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. […]

Continue reading …

புதுவை முதலமைச்சரின் வேதனை!

Comments Off on புதுவை முதலமைச்சரின் வேதனை!

புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி எங்களுக்கு அதிகாரமும் இல்லை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை என வேதனையுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் புதுவை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகியது. புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னரே தாக்கல் ஆகும் என்பதால் இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். யூனியன் […]

Continue reading …

பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் ஆர்ப்பாட்டம்!

Comments Off on பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு பெருமளவு வருகை புரிவதால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், வட மாநில தொழிலாளர்கள் தமிழ் மக்கள் ஒப்பந்தம் செய்யும் தொகையினை விட குறைவான தொகைக்கு வேலை செய்வதால் தமிழர்களின் வேலை பாதிக்கப்படுவதாக பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பல இடங்களில் தங்களது வேலை வாய்ப்பினை பறித்துகொண்டு வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் மாநில […]

Continue reading …

ஓபிஎஸ் மகன் பிரதீப் வலைதள பதிவு!

Comments Off on ஓபிஎஸ் மகன் பிரதீப் வலைதள பதிவு!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், “இறைவனின் தீர்ப்புக்காக சோதனையோடு பொறுமையுடன் போராடிக் கொண்டு காத்திருக்கின்றோம். காலைப் பிடித்து பதவி வாங்கி, பதவி வாங்கி பணத்தை சேர்த்து, சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி, கூட்டத்தை வைத்து பதவி பெற நீதியை நிதியால் வளைத்து, பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி, இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவிவெறி பிடித்த […]

Continue reading …

மகன் கல்லறையில் கி.யூ.ஆர்.கோட்-ஐ பதித்த பெற்றோர்!

Comments Off on மகன் கல்லறையில் கி.யூ.ஆர்.கோட்-ஐ பதித்த பெற்றோர்!

இறந்த மகனின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டி, கல்லறையில், கியூ.ஆர். கோட்-ஐ பதித்துள்ளனர் கேரளாவைச் சேர்ந்த பெற்றோர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குரியாச்சிராவச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி லீனா. இவர்களின் மகன் ஐவீன் பிரான்சிஸ் உடன் ஓமன் நாட்டில் வசித்து வந்தனர். மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, இசை மற்றும் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 2021ம் ஆண்டு பேட்மிட்டன் விளையாடும்போது, திடீரென்று மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். மகனின் இழப்பைத் தாங்க […]

Continue reading …