Home » Posts tagged with » Netrikkan (Page 312)

மகேஷ் பாபுவின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு?

Comments Off on மகேஷ் பாபுவின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு?

கடந்த ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் ரிலீசான “சர்காரு வாரிபாட்டா” திரைப்படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அவரின் அடுத்த திரைப்படம் பற்றிய கேள்விகள் எழுந்தன. ராஜமௌலி இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. அதற்கான வேலைகளை ராஜமௌலி தொடங்கிவிட்டார். ஆனால் ஷூட்டிங் தொடங்க எப்படியும் ஒரு வருடத்திற்கு மேலாகும் என்பதால் இப்போது மகேஷ் பாபு தன்னுடைய அடுத்த படமாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் அமலா […]

Continue reading …

“விடுதலை” படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

Comments Off on “விடுதலை” படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

மார்ச் 30ம் தேதி வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து ரிலீசாகவுள்ள திரைப்படம் “விடுதலை.” மேனன் ராஜீவ்மேனன் முக்கிய ரோலில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue reading …

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் படத்தின் டைட்டில்!

Comments Off on ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் படத்தின் டைட்டில்!

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “ஆர்சி 5” படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு […]

Continue reading …

டூத் பிரஷ்ஷால் சுவரைத் துளைத்த கைதிகள்!

Comments Off on டூத் பிரஷ்ஷால் சுவரைத் துளைத்த கைதிகள்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கேற்ப அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலையில் டூத் பிரஷ்ஷை பயன்படுத்தி சுவற்றில் துளையிட்டு கைதிகள் தப்பியுள்ளனர். “ஷஷாங்க் ரெடெம்ப்சன்” என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றது. அந்த திரைப்படத்தில் கதாநாயகன் ஆண்டி தான் சிறைவைக்கப்பட்டிருக்கும் அறையின் சுவரை கொஞ்சம் கொஞ்சமாக துளையிட்டு கிளைமேக்ஸில் அதிலிருந்து தப்பி சென்று விடுவார். அதுபோன்று உண்மையாகவெ தற்போது ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள சிறைச்சாலையில் கடந்த 20ம் தேதியன்று சிறை கைதிகளை […]

Continue reading …

காணாமல் போன கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு!

Comments Off on காணாமல் போன கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் காணாமல் போனார். அவரை அவரது நண்பர்களே கொலை செய்து புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த ஜெகன்ஸ்ரீ என்ற தனியார் கல்லூரி மாணவர் திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்தனர். ஜெகனின் நண்பர்கள் 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவர்கள் தான் […]

Continue reading …

பிக்பாஸ் பிரபலத்தின் டுவிட்டரால் பரபரப்பு!

Comments Off on பிக்பாஸ் பிரபலத்தின் டுவிட்டரால் பரபரப்பு!

“பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஆன்லைன் ரம்மியை விட மோசமானது டாஸ்மாக், அதை மூடுங்கள்” என்று பதிவிட்டள்ளார். இதுவரையிலும் ஆன்லைன் ரம்மி காரணமாக 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்த மசோதா சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. “ஆன்லைன் ரம்மியை விட குடி நிறைய குடும்பங்களை அழிக்கிறது, எனவே முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள். குடியால் ஆதரவற்று நிற்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம், இக்கருத்தை கூறியதால் என்னை அரசியலுக்கு எழுக்காதீர்கள். உங்களால் தாங்கிக் கொள்ள […]

Continue reading …

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம்!

Comments Off on கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம்!

சுற்றுலா பயணிகள் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட இனி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு பதினைந்து ரூபாய், சிறியவர்களுக்கு பத்து ரூபாய் மற்றும் மாணவர்களுக்கு ஐந்து ரூபாய் என்றும் வெளிநாட்டவர்களுக்கு பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாய் சிறியவர்களுக்கு 25 என்றும் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Continue reading …

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்!

Comments Off on 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்!

மேயர் பிரியா சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கலில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்னாக்ஸ் வழங்கப்படும் என்றும் மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறை கற்பித்தல் வகுப்பில் பங்கேற்கும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023&24ம் ஆண்டு கல்வி ஆண்டிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி […]

Continue reading …

நாடாளுமன்றம் கூட்டம் ஒத்திவைப்பு!

Comments Off on நாடாளுமன்றம் கூட்டம் ஒத்திவைப்பு!

இன்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய ஒரே நாளில் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாடாளுமன்றம் தொடங்கிய முதல் நிமிடமே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கூச்சம் குழப்பம் நிலவியது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் மக்களவை மாலை 4 மணி வரையிலும் மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் […]

Continue reading …

சூர்யா மற்றும் கார்த்தி நடிகர் அஜீத்துடன் சந்திப்பு!

Comments Off on சூர்யா மற்றும் கார்த்தி நடிகர் அஜீத்துடன் சந்திப்பு!

நடிகர் அஜீத்தின் தந்தை மறைவிற்கு நடிகர் அஜித்தை நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜீத்தை நேரில் சந்தித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அஜீத்தின் தந்தை பி.எஸ்.மணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார். அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விஜய் உள்ளிட்ட ஒரு சிலர் நேரில் சென்று அஜீத்துக்கு ஆறுதல் அளித்தனர். இன்று நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜீத் வீட்டிற்கு சென்று […]

Continue reading …