
கமலஹாசன் ஹெச் வினோத் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த “துணிவு” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கமல் “இந்தியன் 2” திரைப்படத்தை முடித்ததும் அடுத்து உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு […]
Continue reading …
வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து பல ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்து அணுகுண்டு சோதனையை மேற்கொள்ள போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருகின்றனர். இவ்வாறு சோதனை செய்யப்படும் ஏவுகணைகள் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் எல்லை பகுதிக்குள் சென்று விழுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை […]
Continue reading …
அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் புதினை சமீபத்தில் மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஷி ஜின்பிங், சந்திக்கப் போவதாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் ஏற்கனவே இரண்டு முறை சீன அதிபராக இருந்த ஜின்பிங் மீண்டும் சீன அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஒரு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் & ரஷ்யா போர் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட […]
Continue reading …
பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அதிமுக தலைமை குறித்தோ, அதிமுக தொண்டர்கள் குறித்தோ கடுமையாக விமர்சனம் செய்யக்கூடாது என்று பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கடந்த சில நாட்களாக ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி முறியும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழகம் வந்துவிட்டு அதன் பிறகு டெல்லி திரும்பிய ஜேபி நட்டா தற்போது தமிழக பாஜகவினருக்கு […]
Continue reading …
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று நடந்த +2 பொது தேர்வில் தமிழ் பாடத்தை 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்பது தமிழை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய தலைகுனிவு என்று தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற +2 தேர்வில் 50 ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் தமிழ் முதல் தாள் தேர்வு எழுதவில்லை. இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்து நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் விஜயகாந்த், “தமிழ் தேர்வை ஐம்பதாயிரம் […]
Continue reading …
பள்ளி கல்வித்துறை நேற்று தொடங்கிய +2 பொதுத்தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்று அறிவித்திருந்தது. நேற்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. நேற்று +2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுகுறித்து கல்வித்துறை அமைச்சரிடம் பேசி மீண்டும் மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் […]
Continue reading …
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை ஐஐடி வளாகத்தில் அவ்வப்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீசாய் என்பவர் சென்னை ஐஐடியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த நிலையில் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினி ஆஸ்கர் விருது வென்றுள்ள பெருமைமிகு இந்தியர்களுக்கு என் சல்யூட் என்று வாழ்த்தியுள்ளார். 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இந்தியாவை சேர்ந்த படைப்புகளுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதைப் பெற்றது. மேலும் தமிழ்நாட்டின் முதுமலை யானைகள் காப்பகம் மற்றும் ஆதரவற்ற யானைகளை வளர்க்கும் தம்பதிகள் பற்றி உருவாக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படத்துக்கு சிறந்த குறும்படப்பிரிவில் விருது வென்றுள்ளது. […]
Continue reading …
கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா என்ற வைரஸ் காய்ச்சல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவி வரும் நிலையில் இது குறித்து விழிப்புணர்வுகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழக அரசு இந்த காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த காய்ச்சல் மூன்று நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் முதல்முறையாக இன்புளுயன்சா காய்ச்சலுக்கு […]
Continue reading …
படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 22 அகதிகள் உயிரிழந்த சம்பவம் மடகாஸ்கர் அருகே உள்ள மயோட் ஆற்றுப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. மடகாஸ்கரிலிருந்து பிரான்ஸ் நாட்டிலுள்ள தீவான மாயோட்டிற்குச் செல்லும் வழியில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில், 22 அகதிகள் உயிரிழந்தனர். இப்படகில் 47 பேர் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில், மடகாஸ்கர் வடக்கே அங்கொம்பொரோன என்ற கடல் பகுதியில் செல்லும்போது, கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று இரவு 1 மணியளவில் அம்பிலோப் அங்கொம்பொரோனாவில் மீனவர்கள் […]
Continue reading …