Home » Posts tagged with » Netrikkan (Page 333)

மத்தியில் அமைச்சருக்கு வேறு துறை ஒதுக்கீடு!

Comments Off on மத்தியில் அமைச்சருக்கு வேறு துறை ஒதுக்கீடு!

மணீஸ் சிசோடியாவை டில்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரின் பேரில் சிபிஐ கைது செய்துள்ளது. இதையடுத்து மணீஸ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் மணீஸ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் […]

Continue reading …

வியாழனும், வெள்ளியும் இணையும் நிகழ்வு!

Comments Off on வியாழனும், வெள்ளியும் இணையும் நிகழ்வு!

வானில் வியாழனும், வெள்ளியும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதை ஆங்கிலத்தில் ‘கன்ஜக்ஷன்’ என்று அழைக்கின்றனர் அதாவது கன்ஜக்ஷன் என்றால் இணைதல் என்று பொருள். ஒரு கோள், நிலவு, நட்சத்திரம் அல்லது பிற கோளுடன் அருகில் தோன்றும் நிகழ்வு என்பது கன்ஜக்ஷன் எனப்படும். சூரிய குடும்ப கோள்களில் மிகப்பெரியதான வியாழன் (ஜூப்பிடர்), பிரகாசமானதான வெள்ளி (வீனஸ்) ஆகிய கோள்கள் இணைந்து ஒரு அற்புதமான காட்சியை வானத்தில் நிகழ்விக்கும் என நாசா தெரிவிக்கிறது. “இதுகுறித்து கடந்த […]

Continue reading …

வாணியம்பாடியில் பள்ளி மாணவர்கள் பலி!

Comments Off on வாணியம்பாடியில் பள்ளி மாணவர்கள் பலி!

சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவர்களின் மேல் கார் ஒன்று கட்டுப்பாடில்லாமல் மோதியதில் மாணவர்கள் துடிதுடித்து இறந்த சம்பவம் வாணியம்பாடியில் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமியர் பலர் கிரி சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். தினம்தோறும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சென்னை & பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். அவ்வாறாக வளையாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த […]

Continue reading …

சபாநாயகர் தமிழக பட்ஜெட் பற்றி அறிவிப்பு!

Comments Off on சபாநாயகர் தமிழக பட்ஜெட் பற்றி அறிவிப்பு!

சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபையில் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மார்ச் மாதம் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்நிலையில் 2023 & 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20ம் தேதி நிதியமைச்சர் தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் அப்பாவுக்கு அறிவித்துள்ளார். வரும் மார்ச் 20ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையில் […]

Continue reading …

ரயில் மோதி கல்லூரி மாணவி பலி!

Comments Off on ரயில் மோதி கல்லூரி மாணவி பலி!

தாம்பரம் ரயில் நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி உள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியில் தொடர்ச்சியாக ரயில்கள் மோதி மனித உயிர் பலியாகி வருவது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. ரயில் தண்டவாளத்தை பாதுகாப்பின்றி கடக்கக்கூடாது என பலமுறை அறிவுறுத்தப்பட்டும் பயணிகள் கவனக்குறைவாக ரயில் தண்டவாரத்தை கடந்து செல்வதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தாம்பரத்தை […]

Continue reading …

லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி!

Comments Off on லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி!

கோவிலுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 5 பெண்கள் பலியான சம்பவம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மோர்பாளையம் அருகேயுள்ள வட்டூர் பகுதியைச் சேர்ந்த ரவி இவரின் மனைவி, கவிதா, சாந்தி கவிதாவின் தம்பியின் 4 வயது மகள் லக்சனா ஆகியோர் வீரப்பூரில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்றுவிட்டு, காரில் திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்தக் காரை ரவி ஓட்டி வந்தார். கார் பரமத்தி வேலூர் […]

Continue reading …

டிக்டாக் செயலிக்கு கனடாவிலும் தடை!

Comments Off on டிக்டாக் செயலிக்கு கனடாவிலும் தடை!

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்த எவ்வித தடையும் கிடையாது. இந்நிலையில் அமெரிக்காவை அடுத்து கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு மற்றும் அரசுக்கு சொந்தமான […]

Continue reading …

தொடர் தோல்வியை சந்திக்கும் நயன்தாரா!

Comments Off on தொடர் தோல்வியை சந்திக்கும் நயன்தாரா!

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு இது கெட்ட நேரம் என்று ஒட்டுமொத்த திரையுலகே பேசி வருகிறார்களாம். “கனெக்ட்” திரைப்படம் தோல்வியால் நயன்தாரா மார்க்கெட் எதிர்பாராத அளவிற்கு இறங்கியது. பின்னர் விக்னேஷ் சிவன் அஜீத் 62 படத்திலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். இதற்கு வக்காலத்து வாங்கிய நயன் ஏமாற்றமடைந்ததுதான் மிச்சம். இப்படி தொடர் சிக்கலுடன் கூடுதல் பிரச்சனை ஒன்று வந்துள்ளது. என்னவென்றால் முன்னணி தயாரிப்பாளரின் வெற்றிப்படத்தில் நடித்த நயன்தாரா அவரது தயாரிப்பிலே அடுத்தடுத்த இரண்டு படங்களில் கமிட் […]

Continue reading …

கமல் அளித்த டுவிஸ்டான பதில்!

Comments Off on கமல் அளித்த டுவிஸ்டான பதில்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகருமான கமலஹாசன் திமுகவோடு கூட்டணி அமைக்க போறீர்களா என்ற கேள்விக்கு டுவிஸ்ட்டான பதிலை அளித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமலஹாசன் போட்டியிட்டார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ஈரோடு கிழக்கில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கவில்லை. மேலும் கமல்ஹாசன் தனது கட்சி ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வழங்கினார். இதனால் திமுக கூட்டணியில் மக்கள் […]

Continue reading …

மதுரையில் பரபரப்பு!

Comments Off on மதுரையில் பரபரப்பு!

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியை பிடிக்க முயன்ற போலீசை ரவுடி அரிவாளால் தாக்கியதால் போலீசார் சுட்டுபிடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்கள் முன்னதாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி டோரா பாலா உத்தங்குடி பகுதியில் உள்ள முட்புதரில் கொன்று சடலமாக வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டோரா பாலாவை கொன்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த வினோத் மற்றும் அவனது […]

Continue reading …