Home » Posts tagged with » Netrikkan (Page 335)

மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி இவ்வளவுதானா?

Comments Off on மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி இவ்வளவுதானா?

தகவல் அறியும் உரிமை மூலமாக மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மிகவும் குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தகவல்கள் வளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மதுரையில் மத்திய அரசின் பல்நோக்கு நவீன மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டில் இதற்காக கல் நடப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது தொடர் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. ஆனால் அதேசமயம் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட அதே காலத்தில் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பல […]

Continue reading …

நடிகை குஷ்புவுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Comments Off on நடிகை குஷ்புவுக்கு அண்ணாமலை வாழ்த்து!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகை குஷ்பூவுக்கு பாஜக மேலிடம் கூடுதல் பதவி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போது பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். தற்போது அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்ற பதவியையும் பெற்றுள்ளார். இதுகுறித்து அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. நடிகை குஷ்பூவுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தேசிய குழு உறுப்பினரான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக […]

Continue reading …

ஈபிஎஸ் கோரிக்கை!

Comments Off on ஈபிஎஸ் கோரிக்கை!

ஈபிஎஸ் பிப்ரவரி 25ல் நடைபெற்ற குரூப்-2, 2ஏ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 25ஆம் தேதி நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன. மாநிலம் முழுதும் 186 தேர்வு மையங்களில் பிப்ரவரி 25ம் தேதி நடந்த குரூப் 2 முதல் நிலை தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாகவும் குளறுபடி சரி செய்யப்பட்டு மீண்டும் காலதாமதமாக தேர்வு நடந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் […]

Continue reading …

தனது படம் ரலீசாகும் முன்பே உயிர்நீத்த இயக்குனர்!

Comments Off on தனது படம் ரலீசாகும் முன்பே உயிர்நீத்த இயக்குனர்!

இளம் இயக்குனர் மனு ஜேம்ஸ் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனராக முதல் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மனு ஜேம்ஸ், “நான்சி ராணி” என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் ஷூட்டிங் முடிந்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் கேரளாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சைப் […]

Continue reading …

ஓரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Comments Off on ஓரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள்(01.-03.-23) தென் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் […]

Continue reading …

பாஜக எம்.எல்.ஏ.வின் கருத்து!

Comments Off on பாஜக எம்.எல்.ஏ.வின் கருத்து!

பாஜக எம்எல்ஏ சரஸ்வதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது பணநாயகம் வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம் என்று கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியிலுள்ள சிஎஸ்ஐ பள்ளியில் இன்று மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி வாக்களித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பணம் அளிக்காமல் வாக்களிப்பதற்கான மனநிலைக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். […]

Continue reading …

மோடியை சந்திக்கும் உதயநிதி!

Comments Off on மோடியை சந்திக்கும் உதயநிதி!

நாளை இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஓரிரண்டு நாட்கள் பயணமாக டில்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது விளையாட்டு துறையை மேம்பாடுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக டில்லி சென்றுள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் […]

Continue reading …

ஓபிஎஸ்ஸின் அதிரடி பேச்சால் பரபரப்பு!

Comments Off on ஓபிஎஸ்ஸின் அதிரடி பேச்சால் பரபரப்பு!

ஓபிஎஸ் கட்சியின் நலனுக்காக பொறுமை காத்தோம், இனி பல ரகசியங்களை மக்களை சந்திக்கும் போது சொல்லப் போகிறோம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொது குழு குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் அதில் பொதுக்குழு செல்லும் என்றும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சட்டபூர்வமாக அதிமுக சென்றுவிட்டது என்பது உறுதியாகி […]

Continue reading …

உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்!

Comments Off on உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலக வங்கியின் தலைவராக பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய உலக வங்கியின் தலைவராக இருக்கும் டேவிட் என்பவர் வரும் ஜூன் மாதம் பதவி விலக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. புதிய உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா என்பவரை அமெரிக்க அதிபர் பரிந்துரை செய்திருப்பதாகவும் அவரது நியமனம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மாஸ்டர் கார்டு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்த அஜய் […]

Continue reading …

பிடிபட்டது மக்னா யானை!

Comments Off on பிடிபட்டது மக்னா யானை!

கோவையில் விவசாய பகுதிகளில் ஆட்டம் காட்டி வந்த ஒற்றை காட்டு யானை பிடிபட்ட நிலையில் அதை வனப்பகுதியில் விடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வனப்பகுதிகள் என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சிலசமயம் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்து விடுவதும், பின்னர் அவை காட்டுக்குள் விரட்டியடிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் மக்னா யானை ஒன்று விவசாய பகுதிகளில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. அதை காட்டுக்குள் விரட்ட […]

Continue reading …