
ஈரோடு இடைத்தேர்தலில் 7 சயேட்சை வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டும், ஒரு வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட இல்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இத்தேர்தல் ஐந்தாவது சுற்றில் முடிவில் ஏழு வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே உள்ளார்கள் என்றும் 73வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ராஜேந்திரன் என்பவர் தனது ஓட்டை கூட அவருக்கு போடவில்லை என்பதும் அவரது […]
Continue reading …
ஒரு லட்சத்தை தாண்டிய வாக்குகளுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தற்போது வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு […]
Continue reading …
“லால் சலாம்“ என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிகை ஜீவிதா ரஜினியின் தங்கையாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஐஸ்வர்யா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய […]
Continue reading …
சீரியல் நடிகை ஒருவர் சென்னையில் பல நகை அடகுக்கடைகளில் போலி நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள பெரம்பூரில் பட்டேல் ரோடு பகுதியில் அடகுக்கடை நடத்தி வருபவர் கண்ணையா லால். சமீபத்தில் இவரது கடைக்கு பெண் ஒருவர் நகை அடகு வைக்க வந்துள்ளார். தாலியிலுள்ள குண்டுகளை அடமானம் வைத்து ரூ.40 ஆயிரம் கேட்டுள்ளார். அதை சோதித்து பார்க்க கண்ணையா லால் முயன்றபோது தாலி நகையை உரசினால் சேதமடையும் என செண்டிமெண்டாக பேசியுள்ளார். இதனால் நகையை […]
Continue reading …
கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு முன்கூட்டியே கோடை வெப்பம் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கும் என்றும் இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நூறு வருடங்களுக்கு பின்னால் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதையடுத்து இவ்வாண்டு கோடை கொடூரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
Continue reading …
அமைச்சர் செந்தில் பாலாஜி சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்சார வாரியம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை குறித்த விழிப்புணர்வு உலகம் முழுதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் சூரிய மின்சார தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூரில் சூரிய மின் உற்பத்தி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் அதில் 6000 மெகா வாட் சூரிய மின்சாரத்தை மின்சார வாரியம் சொந்தமாக உற்பத்தி […]
Continue reading …
மனைவி சிக்கன் சமைத்து தருவதற்கு மறுத்ததால் வீட்டையே கொளுத்தியுள்ளார் கணவர். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த உஜ்ஜையின் அருகே மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் தனக்கு சிக்கன் குழம்பு வைக்க வேண்டும் என மனைவியிடம் கேட்டதற்கு சிக்கன் வைக்க முடியாது ஏற்கனவே பருப்பு சமைத்து விட்டதால் அதை சாப்பிடும் படி மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மது போதையில் மனைவியை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதன் காரணமாக வீட்டின் […]
Continue reading …
நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படமான “சூர்யா 42” நடிகர் விஜய் திரைப்படமான ‘லியோ’ வியாபாரத்தை முறியடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் இதுவரை ரூபாய் 400 கோடி பிசினஸ் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. சூர்யா நடித்து வரும் “சூர்யா 42” படத்தின் வியாபாரம் 500 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுவது நம்ப முடியாத தகவலாக உள்ளது. கோலிவுட் திரையுலகை பொருத்தவரை விஜய்க்கு தான் அதிக […]
Continue reading …
கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். இந்திய தேசிய ஒற்றுமை பயணம் நடத்திய ராகுல் காந்தி அந்த பயணம் முடியும் வரை தாடியுடன் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தாடியை டிரீம் செய்து புதிய அட்டகாசமான லுக்கில் தோற்றமளிக்கிறார். இந்த புதிய லுக்குடன் அவர் தான் படித்த இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். இதற்காக அவர் லண்டன் சென்றுள்ளதாகவும் 21ம் நூற்றாண்டில் கேட்க கற்றுக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் […]
Continue reading …
வானிலை மையம் கிழக்கு திசையில் காற்றின் வேகமாறுபாட்டால், தென்மாவட்டங்களில். இன்று மற்றும் மார்ச் 4ம் தேதி மிதமான மழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வரும் மார்ச் 2, 3,5 ஆகிய தேதிகளில், தைழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும், என்றும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மார்ச் 2,3, 5 ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில், அடுத்த […]
Continue reading …