Home » Posts tagged with » Netrikkan (Page 375)

ஆ.ராசாவின் சொத்துக்கள் முடக்கம்!

Comments Off on ஆ.ராசாவின் சொத்துக்கள் முடக்கம்!

அமலாக்கத்துறை முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசாவுக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. திமுக எம்.பி. ராசாவின் பினாமி நிறுவனத்திற்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 45 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. முறைகேடான பண பரிமாற்றம் மூலம் […]

Continue reading …

விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது!

Comments Off on விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது!

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தொடங்கி அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது. இன்றுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பள்ளிகள் விடுமுறை காலத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் புதிய உத்தரவை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மாணவர்கள் […]

Continue reading …

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கனிமொழி!

Comments Off on ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கனிமொழி!
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கனிமொழி!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஒற்றுமை பயணம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலிவுட் பிரபலங்கள் முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவ்வகையில் தற்போது திமுக எம்பி கனிமொழி இப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் ராகுல் காந்தியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் உள்ளிட்ட பல புகைப்படங்கள் […]

Continue reading …

அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது!

Comments Off on அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது!

அமைச்சர் கீதா ஜீவன், வீடு மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டரில், “திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம். தொடர்ச்சியாக பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் திமுகவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் […]

Continue reading …

முக்கிய வீரர்களின் ஏலத்தொகையின் விபரம்!

Comments Off on முக்கிய வீரர்களின் ஏலத்தொகையின் விபரம்!

முக்கிய வீரர்களின் ஐபிஎல் மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. முக்கிய வீரர்களின் ஏலத்தொகை என்ன? என்பதற்கான விபரங்கள் இதோ… அமித் மிஸ்ராவை அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு, லக்னோ அணியும், பியூஷ் சாவ்லாவை அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு, மும்பை அணியும், இங்கிலாந்து வீரர் சாம் கரன் ரூ.18.5. கோடிக்கு ஏலம்.- மேலும் நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன்னை அடிப்படை விலையான 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! நியூசிலாந்து வீரர் […]

Continue reading …

பாஜகவின் கேள்வி!

Comments Off on பாஜகவின் கேள்வி!

பாஜக கட்சியினர் அண்ணாமலையின் கையில் கட்டியுள்ள கைக்கடிகாரத்தின் பில்லை காட்டினால் முரசொலியின் மூலப்பத்திரத்தை காட்டுவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர் செந்தில் குமார் உள்பட பல திமுகவினர் கடந்த சில நாட்களாக அண்ணாமலை கையில் கட்டியுள்ள கைக்கடிகாரத்தின் பில் எங்கே என கேள்வி எழுப்பினர். இது குறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் உட்பட இணையதளங்களில் வைரலாகின. திமுகவினரின் கேள்விகளுக்கு அண்ணாமலை உள்பட பாஜகவினர் அதிரடியாக பதில் அளித்து வந்தனர். தற்போது பாஜகவின் சிடி நிர்மல் குமார் தனது டுவிட்டரில் […]

Continue reading …

மீனவர்கள் கைது குறித்து டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

Comments Off on மீனவர்கள் கைது குறித்து டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதற்கு மத்திய அமைச்சர் கவலை தெரிவித்து பயனில்லை, இலங்கையை எச்சரிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 25 நாட்களாக இல்லாமல் […]

Continue reading …

2 மாதக்குழந்தை பலி!

Comments Off on 2 மாதக்குழந்தை பலி!

ஒரே நாளில் பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன குழந்தைக்கு மூன்று தடுப்பூசிகள் போட்டதால் அக்குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் சுகன்யா தம்பதியருக்கு கடந்த ஐம்பது நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. குழந்தை பிறந்தவுடன் 45 நாட்களில் போடவேண்டிய தடுப்பூசியை பெற்றோர் போடாமல் இருந்ததால் 52வது நாளில் ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிகிறது. குழந்தையின் மூக்கிலும், வாயிலும் திடீரென ரத்தம் வந்ததை […]

Continue reading …

ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு கொரோனா!

Comments Off on ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு கொரோனா!

ஆந்திராவில் குவைத்திலிருந்து வந்த இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டள்ளது. அதனால் அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இந்தியாவிலும் படிப்படியாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை பார்த்து விட்டு கடந்த 19ம் தேதி ஆந்திரா திரும்பினார். அப்போது அவருக்கு பரிசோதனை செய்தபோது புதிய வகை கொரோனா வைரஸ் அதாவது உருமாறிய ஒமிக்ரான் […]

Continue reading …

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 600 சிறப்பு பேருந்துகள்!

Comments Off on கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 600 சிறப்பு பேருந்துகள்!

சென்னையிலிருந்து கிறிஸ்மஸ் பண்டிக்கையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாவருடம் தீபாவளி, பொங்கல் உட்பட பண்டிகையொட்டி சென்னை மாநகரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டும். அதன்படி, இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து பொதுமக்களின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை 300 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் […]

Continue reading …