
எச் வினோத் இயக்கத்தில். நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற “கேங்க்ஸ்டா” என்ற பாடல் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். அப்பதிவில் அதுமட்டுமின்றி இப்பாடலின் முழு வரிகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வரிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலின் ஒவ்வொரு வரியும் ஆவேசத்தை தூண்டும் வகையில் ஆக்ரோஷமாக இருப்பதாக ரசிகர்கள் இந்த பாடலின் […]
Continue reading …
மதுபானங்களை பறித்துச் செல்ல திருச்சி டாஸ்மாக்கில் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார் ஒரு இளைஞர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் திருச்சி மாவட்டத்தில் ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரு இளைஞர் வந்து ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, மதுபானங்களுக்கு காசுகொடுக்காமல் நாளை கொடுப்பதாக அவர் அதை எடுத்துச் சென்றார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
Continue reading …
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா நோயாளிகள் பேராபத்தை சுற்றி வருகின்றனர் என்ற கருத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என்னுடைய நோயாளி ஒருவர் மருந்து வாங்குவதற்காக மருந்து கடைக்கு சென்றார். அவர் வாங்கிய 4 மருந்துகளில் மூன்று மாத காலாவதியான மருந்து. காலவதியான மருந்துகளை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே ஒவ்வொருவரும் மருந்துகள் வாங்கும்போது மருந்துகள் காலாவதி தேதியை சோதனை செய்து வாங்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கான மருந்து, மளிகை பொருட்கள் […]
Continue reading …
நடிகை கனகாவின் வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளும், 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா. இவர், தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் முன்னணி நடிகர்கள், சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “அதிசய பிறவி,” ராமராஜனுடன் “கரகாட்டக்காரன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்டானது. இன்று இவர், வசிக்கும் சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீட்டில் திடீரென தீவிபத்து […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் சசிகலா புஷ்பாவின் கார் மீது தாக்குதல் நடந்துள்ளதை குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம். தொடர்ச்சியாக தமிழக பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் திமுகவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் பெயரில் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்களைக் […]
Continue reading …
காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரொனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரொனா நோய்தொற்று பரவியது. இவ்வாண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் கொரொனா நோய் தொற்று பரவி வருகிறது. விரைவில் 5ம் அலை பரவல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், முக்கவசம் […]
Continue reading …
மு.ராஜேந்திரனுக்கு 2022ம் ஆண்டிற்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இலக்கிய படைப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்கிய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு, காலாபாணி என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், எழுதிய காலாபாணி என்ற நாவல் காளையர் கோயில் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலாகும். எனவே, எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய […]
Continue reading …
போதை பொருள் விற்பனை செய்த கும்பலை பெரு நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்பில் சென்று போலீஸ் கைது செய்துள்ளனர். போதை பொருள் குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் போதை வஸ்துகள் உற்பத்தி, விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அவ்வப்போது அந்நாட்டு போலீஸ் குற்றவாளிகள் சிலரை பிடித்தாலும் போதை பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க முடியவில்லை. போலீசின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப போதை பொருள் கும்பலும் அப்டேட்டாகி விடுகின்றன. அவர்களை பிடிக்க போலீசும் புதிய முறைகளை கையாள்வது வழக்கமாகியுள்ளது. […]
Continue reading …
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் வரும் டிசம்பர் 27ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் […]
Continue reading …
“இன்று நேற்று நாளை” சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் “அயலான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் கூறப்படுகிறது. இப்படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. “அயலான்” திரைப்படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த 5க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகி விட்டன. ஆனால் “அயலான்” நிலை என்னவென்றே தெரியவில்லை. முதலில் இந்த படத்தை […]
Continue reading …