
சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள கங்கேர் மாவட்ட எல்லையில் ரிசர்வ் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் பலியாகி உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் நக்சல்கள் தப்பியோடி உள்ளனர். சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள கங்கேர் மாவட்ட எல்லையில் பிரபலமான தேவ்கான், ஹுச்சாடி ஆகிய காட்டுப் பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளதாக போலீசுக்கு தகவல் வந்ததையடுத்து, நாராயண்பூர் பகுதியைச் சேர்ந்த நக்சல் தடுப்பு படை போலீசார் அங்கு சென்று அவர்களைத் தேடினர். அப்போது, நக்சல்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியில் சுடவே, இருதரப்பினரும் […]
Continue reading …
ரஷ்யா உக்ரேன் மீது அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை நடத்திய நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகின்றனர். சமீபத்திய நாட்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்தியிருந்தது. இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் குறித்து தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன. தரை இலக்குகளைத் தாக்குவதற்கு, தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துவதை ஆயுதப் பற்றாக்குறையின் அறிகுறியாக பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சர்வதேச வியூக ஆய்வுகள் நிறுவனத்தின் ராணுவ நிபுணரான டக்ளஸ் பாரி “சமீபத்திய […]
Continue reading …
ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து ஜிம்பாப்வே அணி […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் தீபாவளி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளதால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]
Continue reading …
திருப்பூரில் சாலையோரம் பச்சிளம் குழந்தை இறந்துகிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் தெற்குபாளையம் பகுதியில் ஒரு பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 7 மாதக் குறை பிரசவசத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து அதை மீடு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்குழந்தையை வீசிச் சென்றது யார் […]
Continue reading …
போக்குவரத்து துறைபேன்சி நம்பர் கட்டணத்தை இரட்டிப்பாக உயர்த்த பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேன்சி நம்பர் கட்டணத்தை இரட்டிப்பாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் 80 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.8 லட்சம் வரை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆர்டிஓ அலுவலங்களில் பேன்சி நம்பர் வேண்டும் என்றால் அதற்கென கட்டணம் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் தற்போது பேன்சி நம்பர் கட்டணத்தை இரட்டிப்பாக்க போக்குவரத்துதுறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்டிஓ மூலம் பெற முடியாதபேன்சி எண்களுக்கு சிறப்பு கட்டணமாக […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி பிரான்சிஸ்கோ ராகுல் காந்தி உடனடியாக ஒற்றுமை நடைபயணத்தை நிறுத்திவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செய்தார். அதன்பின் ஒற்றுமை நடை பயணத்தை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் மக்களிடையே ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ராகுல்காந்தியின் பிரச்சாரத்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். எனவே அவர் ஒற்றுமை நடை பயணத்தை நிறுத்திவிட்டு பிரசாரத்தில் […]
Continue reading …
“காந்தாரா” திரைப்படம் இந்தியளவில் ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் “காந்தாரா” திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. “கேஜிஎப்” திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அவ்வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான “காந்தாரா” திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் பெற்றுள்ளது. மொழி தாண்டியும் சென்னை உட்பட்ட நகரங்களில் சப்டைட்டில் வசதியோடு இந்த படம் ஓடி வருகிறது. “பொன்னியின் செல்வனு”க்கு பிறகு […]
Continue reading …
பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் உலக பசி குறியீட்டில் இந்தியா 107-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது கவலையளிப்பதாக டுவிட்டரில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “2022ம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியா, ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை விட பின்தங்கியிருப்பது கவலையளிக்கிறது! உலக பசி குறியீடு என்பது பசி, […]
Continue reading …
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை அரசு விரைந்து சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். சீமான் தனது சமூக வலைதளத்தில், “தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரி செய்ய வேண்டும். புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் […]
Continue reading …