Home » Posts tagged with » Netrikkan (Page 438)

சமூக வலைதளங்களுக்கு அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை!

Comments Off on சமூக வலைதளங்களுக்கு அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை!

சமூக வலைதளங்களை பயன்படுத்த இலங்கையில் அரசு ஊழியர்களுக்கு தடை விதிப்பதாக அதிரடி உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் பொது மக்கள் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டம் காரணமாக கோத்தபாய ராஜபக்ஷ மகிந்தா ராஜபக்சே உட்பட ராஜபக்சவின் குடும்பத்தினர் பதவி விலகினார்கள். இந்நிலையில் மீண்டும் இலங்கையில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதாகவும் போராட்டம் பரவ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து […]

Continue reading …

மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

Comments Off on மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

மர்ம நபர்கள் மிரட்டல் கடிதத்தில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று பொள்ளாச்சியிலுள்ள மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என எழுதப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் […]

Continue reading …

தமிழக அரசு மாணவர்களுக்கு கொடுத்த உறுதி!

Comments Off on தமிழக அரசு மாணவர்களுக்கு கொடுத்த உறுதி!

தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஒப்பந்தம் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வரும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்கப்படும் என்ற தகவலையும் தமிழக அரசு உறுதி செய்துள்ளதால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி […]

Continue reading …

முதலமைச்சர் பதவியே முக்கியம்!

Comments Off on முதலமைச்சர் பதவியே முக்கியம்!

காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகியதாக அசோக் கெலாட் முதலமைச்சர் பதவி மட்டுமே முக்கியம் என்று கூறியுள்ளார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிட்டால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயங்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் பதவியை விட முதல்வர் பதவியே மேல் என முடிவு செய்த அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் […]

Continue reading …

பிரபல ரவுடி படுகொலை!

Comments Off on பிரபல ரவுடி படுகொலை!

ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னை பள்ளிக்கரணையில் நடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பள்ளிக்கரணையிலுள்ள அம்பேத்கர் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்கள் ஆயுதங்களோடு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். அதற்குள் அங்கு ரவுடிகள் தப்பி சென்று விட்ட நிலையில் புதர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனை கொண்டு […]

Continue reading …

பாப்புலர் ப்ரண்ட் ஆப்பின் இணையதளம் முடக்கம்!

Comments Off on பாப்புலர் ப்ரண்ட் ஆப்பின் இணையதளம் முடக்கம்!

இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் புகார்கள் கூறப்பட்டன, இந்நிலையில் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இச்சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் […]

Continue reading …

அலங்கார வாகனங்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு!

Comments Off on அலங்கார வாகனங்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு!
அலங்கார வாகனங்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு!

மத்திய அரசு குடியரசு தின விழாவில் இடம்பெற உள்ள அலங்கார வாகனங்களுக்காக விண்ணபிக்க வேண்டிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழக வாகனங்கள் இடம்பெறுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் இடம்பெறும் மாநில அலங்கார வாகனங்கள் விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா அன்று மாநில அரசுகளின் அலங்கார வாகனங்கள் டெல்லி குடியரசு தின […]

Continue reading …

ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Comments Off on ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

போரில் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை இணைக்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போரில் கைப்பற்றிய பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நிலையில் விரைவில் உக்ரைன் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் நான்கு முக்கிய உக்ரைன் நகரங்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த 4 நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு […]

Continue reading …

வந்தே பாரத் ரயில் ஒன்று மட்டுமே!

Comments Off on வந்தே பாரத் ரயில் ஒன்று மட்டுமே!

தெற்கு ரெயில்வேக்கு ஒரே ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புல்லட் ரயிலை விட அதிக வேகத்தில் இயங்கும் என்றும் இதன் சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வந்து வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த ரயில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை ஐசிஎப் ஆலையில் 27 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் […]

Continue reading …

நடிகர் மகேஷ்பாபு தாயார் மறைவு!

Comments Off on நடிகர் மகேஷ்பாபு தாயார் மறைவு!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானதையடுத்து அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் இந்திராணி இன்று காலை காலமானார். அவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனின்றி காலமானதாகவும் கூறப்படுகிறது. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயாருமான இந்திராணி மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து […]

Continue reading …