Home » Posts tagged with » Netrikkan (Page 437)

தேசிய விருது வழங்கும் விழாவில் முக்கிய நட்சத்திரங்கள்!

Comments Off on தேசிய விருது வழங்கும் விழாவில் முக்கிய நட்சத்திரங்கள்!

நடிகர் சூர்யா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் 68வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு நாட்டில் கலைத்துறைக்கான, 68வது தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி அறிவித்தது. இதில், தமிழ் சினிமாவில், சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான “சூரரைப்போற்று” திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த படம் – 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சிறந்த நடிகர் சூர்யாவும், சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளியும், […]

Continue reading …

பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை

Comments Off on பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி ரத்து செய்தார். இத்தீர்ப்பை பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது. இது அதிமுகவின் தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கான வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச […]

Continue reading …

குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

Comments Off on குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

ரூ.28.80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை குஜராத் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் என்ற பகுதியில், ரூ.15 .80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆறு பெட்டிகளில் இந்தக் கள்ள நோட்டுகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், துரிதமாகச் செயல்பட்ட போலீசார் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்து குற்றவாளிகளிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்தக் கள்ள நோட்டியில், ரிசர்வ் பேங்க் என்பதற்குப் பதிலாக ரிவர்ஸ் […]

Continue reading …

இந்தியாவில் நாளை முதல் 5ஜி!

Comments Off on இந்தியாவில் நாளை முதல் 5ஜி!

பிரதமர் மோடி நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கின்றார். பிரதமர் மோடி நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி சேவைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் முகேஷ் அம்பானியின் ஜியோ உள்ளிட்ட 3 நிறுவனங்கள் ஏலம் எடுத்தது. இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் நாளை முதல் இந்தியாவில் 5ஜி […]

Continue reading …

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

Comments Off on உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

உச்சநீதிமன்றம் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான பெண்கள் கருக்கலைப்பு செய்ய ஏற்கனவே சட்டபூர்வ உரிமை இருக்கும் நிலையில் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. பாதுகாப்பான சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கருவை கலைக்க அனுமதி கோரி திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி […]

Continue reading …

நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த பாட்டி!

Comments Off on நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த பாட்டி!

பேருந்து நடத்துனரிடம் ஒரு பாட்டி, “உன் ஓசி டிக்கெட் எனக்கு வேண்டாமென்று” வாக்குவாதம் செய்துள்ள பாட்டியின் வீடியோ வைரலாகி உள்ளது. கடந்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சியமைத்த நிலையில் நகர, உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில் இலவச பேருந்தில் ஏறிய பாட்டி ஒருவர் டிக்கெட்டிற்கு பணம் தருகிறார். அதற்கு பேருந்து நடத்துனர் இது […]

Continue reading …

ஐயான் சூறாவளி! க்யூபாவையும் விட்டுவைக்கல!

Comments Off on ஐயான் சூறாவளி! க்யூபாவையும் விட்டுவைக்கல!

ஐயான் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. இந்நிலையில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரியா மாகாணத்தில் உள்ள கேயோ கோஸ்டா கடற்கடை அருகே ஐயான் சூறாவளி புயல் கரையை கடந்தது. அமெரிக்காவில் பாதிப்புகளை ஏற்படுத்திய மோசமான சூறாவளி புயல்களில் ஒன்றாக ஐயான் கூறப்படுகிறது. மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகமாக காற்று வீசியபடி கரை கடந்த ஐயான் சூறாவளி புயல் ஆர்லேண்டோ மற்றும் கேப் கேனவரேல் பகுதிக்கு இடையே மையம் கொண்டபோது காற்றின் […]

Continue reading …

பூஜை விடுமுறை நாட்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

Comments Off on பூஜை விடுமுறை நாட்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

சென்னையிலிருந்து தொடர் விடுமுறை நாட்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப் போவதாக தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை ஆகியவை காரணமாக அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி அரசு விடுமுறை வருவதால் மூன்றாம் தேதி மட்டும் விடுமுறை போட்டால் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்நிலையில் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்கள் […]

Continue reading …

குரூப் 2, 2ஏ, 4 தேர்வு முடிவுகள் எப்போது?

Comments Off on குரூப் 2, 2ஏ, 4 தேர்வு முடிவுகள் எப்போது?

கடந்த மே மாதம் 21ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2ஏ, மற்றும் குரூப் 4 நடைபெற்ற தேர்வின் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இத்தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். அதேபோல் குரூப் -4 பதவிகளுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இத்தேர்வை லட்சக்கணக்கானவர்கள் எழுதினர். இந்நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் […]

Continue reading …

சீன விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

Comments Off on சீன விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

சீன விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் நிலத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் சமீபகாலத்தில் விண்வெளி ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனக்கென தனி விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தொடங்கியுள்ள சீனா, செவ்வாய் கிரகத்திலும் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதற்காக செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக தியான்வென் – 1 என்ற விண்கலத்தை அனுப்பிய சீன விண்வெளி ஆய்வு மையம் அதன் மூலம் […]

Continue reading …