Home » Posts tagged with » Netrikkan (Page 447)

பால்வளத்துறை அமைச்சரின் புதிய தகவல்!

Comments Off on பால்வளத்துறை அமைச்சரின் புதிய தகவல்!

பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் நிறுவனத்திற்கு தினமும் ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தின் இனிப்பு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது பற்றி கூறிய அமைச்சர் நாசர், “ஆவின் நிறுவனம் தினமும் ரூ.85 லட்சம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றும் அதனால்தான் இனிப்புகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். பால் கொள்முதல் விலை அதிகரிப்பு தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் முதலமைச்சர் […]

Continue reading …

தெரு நாய்களின் தொல்லைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

Comments Off on தெரு நாய்களின் தொல்லைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

தெருநாய்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சமீபத்தில் தெரு நாய் தொல்லை காரணமாக குழந்தைகள் முதியோர்கள் கடித்துக் குதறப்பட்டார்கள். தெரு நாய்களின் தொல்லையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து கேரளாவில் தெருநாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருவதாகவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நிலைமை விபரீதமாவதற்கு […]

Continue reading …

புதுமணப்பெண் தற்கொலை

Comments Off on புதுமணப்பெண் தற்கொலை

திருமணமாகி 4 மாதத்தில் பட்டதாரிப் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபிச்செட்டிபாளையம் அருகே கோபிச்செட்டிபாளையம் அருகே பொலவக்ககாளிபாளையம் தோட்டக் காட்டூரில் திருவேங்கடசாமி மற்றும் மரகதமணி வசித்து வருகின்றனர். இவர்களது மகள் இந்து கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருக்கும் நல்லககண்டன்பாளையம் துளசி நகரைச் சேர்ந்த விஷ்ணுபாரதிக்கும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் நடந்தது. தம்பதியர் இருவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வந்த […]

Continue reading …

பொய் செய்திகளை பரப்புபவர்களுக்கு அமைச்சர் விளக்கம்!

Comments Off on பொய் செய்திகளை பரப்புபவர்களுக்கு அமைச்சர் விளக்கம்!

அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இருக்கின்றதா என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 327 அத்தியாவசியமான மருந்துகளை மக்களுக்கு தடையில்லாமல் கொடுத்து வருகிறோம். ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை வாரந்தோறும் ஆய்வு செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை மருத்துவ சேவையை […]

Continue reading …

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு!

Comments Off on ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு!

கடந்த பல தசாப்தங்களில் அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்களின் மிகப்பெரும் கூடுகையாக வரும் திங்கள்கிழமை (செப். 19) நடைபெறவுள்ள ராணியின் இறுதிச்சடங்கு அமைய உள்ளது. இறுதிச் சடங்குக்கான அழைப்பிதழ்கள் சென்ற வார இறுதியில் பல தரப்பினருக்கும் சென்றுள்ள நிலையில், சுமார் 500 அரசு தலைவர்கள் மற்றும் முக்கியப் வெளிநாட்டு பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையான தலைவர்கள் வணிக விமானங்களில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்கு லண்டனில் உள்ள ஓரிடத்தில் இருந்து பேருந்துகள் மூலம் […]

Continue reading …

பொள்ளாச்சியில் பிரதமர் பிறந்தநாளுக்கு எதிர்ப்பு!

Comments Off on பொள்ளாச்சியில் பிரதமர் பிறந்தநாளுக்கு எதிர்ப்பு!

பொள்ளாச்சியில் கடைவீதி உரிமையாளர்கள் பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு எதிர்ப்ப- தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு கடை அடைப்பு செய்து சாலைமறியலில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி நகர்புற பகுதியில் உள்ள கடைவீதியில் 5000 மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன, இப்பகுதியில் ஆட்டோ ஸ்டோண்ட் உள்ளது, பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு பாரதிய கோவை மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம் பிஎம்எஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு அனுமதியின்றி பேனர் வைத்ததால் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகள் […]

Continue reading …

டிடிவி தினகரன் ஆ.ராசா பேசியியது குறித்து கருத்து!

Comments Off on டிடிவி தினகரன் ஆ.ராசா பேசியியது குறித்து கருத்து!

டிடிவி தினகரன் ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது- என்று கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியிருப்பது மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் திமுக எம்பி ஆ ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]

Continue reading …

குழந்தைகளிடம் தீண்டாமை செய்த இருவர் கைது!

Comments Off on குழந்தைகளிடம் தீண்டாமை செய்த இருவர் கைது!

ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு திண்பண்டங்களை வழங்க முடியாது தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் பாஞ்சாகுளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை செய்த பெட்டிக்கடை சீல் வைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகிலுள்ள பஞ்சாகுளம் கிராமத்தில் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திர மூர்த்தி ஆகிய இருவரும் ஒரு பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஆதி திராவிட பள்ளிக் குழந்தைகளுக்கு அவர் கடையில் வந்து பொருட்கள் கேட்டால் வழங்க முடியாது என கூறியதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் அக்கடைக்குச் சென்று […]

Continue reading …

தேர்தலைப் பற்றி கமல் முக்கிய தகவல்!

Comments Off on தேர்தலைப் பற்றி கமல் முக்கிய தகவல்!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியா? என்பது குறித்து தகவல் அளித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. ஆனால், அக்கட்சியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமலுக்கும், பாஜக வானதி சீனிவாசனுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்த நிலையில் கமல் தோல்வியுற்றார். இந்நிலையில், கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் அரசு […]

Continue reading …

“பகாசூரன்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

Comments Off on “பகாசூரன்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

“பகாசூரன்” திரைப்படத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். கதாநாயகனாக செல்வராகவன் நடித்துள்ளார். “திரௌபதி” மற்றும் “ருத்ர தாண்டவம்“ ஆகிய இரு திரைப்படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றிப்பெற்ற திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால் சர்ச்சைக்குரிய ஒரு இயக்குனராகவே மோகன் ஜி பார்க்கப்படுகிறார். இந்நிலையில் அவரின் மூன்றாவது படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்க முன்னணி நடிகரும் ஒளிப்பதிவாளருமான […]

Continue reading …