Home » Posts tagged with » Netrikkan (Page 540)

முதலமைச்சர் இலங்கை மக்களுக்காக பிரதமருக்கு கடிதம்

Comments Off on முதலமைச்சர் இலங்கை மக்களுக்காக பிரதமருக்கு கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க மத்திய அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரிய தமிழக அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

Continue reading …

சமந்தா போஸ்டர் இணையத்தில் வைரல்!

Comments Off on சமந்தா போஸ்டர் இணையத்தில் வைரல்!

“சகுந்தலம்” என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் சமந்தா. சமீபத்தில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்தார். இவர் “புஷ்பா” படத்தில் கவர்ச்சியாக ஆடிய நடனம் அனைவராலும் பெரிதும் கவரப்பட்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஆனாலும் தனது அடுத்தடுத் திரைப்படங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார் சமந்தா. அவருக்கு இன்று பிறந்தநாள். அவருடைய பிறந்த நாளான இன்று அவர் […]

Continue reading …

ஸ்ரீரங்கத்தில் நாளை தேரோட்டம்!

Comments Off on ஸ்ரீரங்கத்தில் நாளை தேரோட்டம்!

மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை தேரோட்டம் என்பதால் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு வழங்க ஆய்வு செய்து வருகின்றனர். மிகவும் பிரசித்திப் பெற்றது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். இக்கோயிலில் நாளை தேர்த் திருவிழா நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தேர் செல்லும் பாதைகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் […]

Continue reading …

ராஜீவ்காந்தி மருத்துவமனை இடிப்பு!

Comments Off on ராஜீவ்காந்தி மருத்துவமனை இடிப்பு!

தீ விபத்து ஏற்பட்ட சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை கட்டிடம் இடிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று திடீரென சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரைதளத்தில் தீப்பிடித்த நிலையில் 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தன. அங்கிருந்த 128 நோயாளிகளை தீயணைப்பு துறையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து மீட்டனர். இதுகுறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. […]

Continue reading …

சிறுவர், சிறுமியருக்கான கொரொனா தடுப்பூசி ஆரம்பம்!

Comments Off on சிறுவர், சிறுமியருக்கான கொரொனா தடுப்பூசி ஆரம்பம்!

சிறுவர் மற்றும் சிறுமியருக்கான கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.   6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்காக தடுப்பூசி Corbevaxக்கு ஒப்புதல் அளிக்க அரசாங்கக் குழு சமீபத்தில் பரிந்துரைத்தது. 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர கால பயன்பாடாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ZyCov-D இன் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் DCGI பரிந்துரைத்துள்ளது. ZyCov-D-ஞி கடந்த […]

Continue reading …

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது!

Comments Off on 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது!

2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு அவர்களது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக காவல்துறை ஆப்பரேஷன் வேட்டை 2.0 என்ற வேட்டையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தியது. இதில் போதை பொருளான கஞ்சா மொத்த வியாபாரிகள் மற்றும் சில வியாபாரிகள் பிடிபட்டனர். ஒரே மாதத்தில் இந்த வேட்டையில் 2,423 வியாபாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடமிருந்து சுமார் 3600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி […]

Continue reading …

தக்காளி விலை கிடுகிடு ஏற்றம்!

Comments Off on தக்காளி விலை கிடுகிடு ஏற்றம்!

தக்காளி விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வெளிவந்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   கடந்த சில நாட்களாக தக்காளி கிலோ 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 80 லாரிகளில் தக்காளி வரும். ஆனால் தற்போது 40 லாரிகளில் […]

Continue reading …

புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப்

Comments Off on புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப்

உலகத்தையை நம் கைக்குள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு செல்போனின் அவசியம் பெரிதாக உள்ளது. அதிலும் வாட்ஸ் ஆப் பெரிதளவில் மக்கள் மத்தியில் உபயோகிக்கும் ஒரு செயலியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. செல்போன் வைத்திருப்போரின் விருப்பத்திற்குரிய ஆப்பாக வாட்ஸ் ஆப் உருமாறி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். காலத்திற்கு ஏற்ப பல சிறந்த அப்டேட்டுகளை அறிந்து, பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இனி அதிகபட்சமாக குரூப் […]

Continue reading …

புதிய தேதியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வா?

Comments Off on புதிய தேதியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வா?

வருகின்ற ஜூன் 26-ம் தேதி அன்று டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “ஒரு சில காரணங்களால் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது, மேலும் ஜூன் 26ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த தேர்வு ஜூலை 2ம் தேதி நடத்தப்படும்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தாலும் ஒரு சில நாட்கள் மட்டுமே […]

Continue reading …

சனிக்கிழமையிலும் ரிஜிஸ்டர் ஆபீஸ் உண்டு

Comments Off on சனிக்கிழமையிலும் ரிஜிஸ்டர் ஆபீஸ் உண்டு

தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக வரும் காலங்களில் சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும் என அறிவித்துள்ளது. மேலும் விடுமுறை நாளன்று பத்திரப்பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பத்திர பதிவு செய்யும் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …