Home » Posts tagged with » Netrikkan (Page 81)

நியூயார்க் சிட்டியில் திடீர் நிலநடுக்கம்; மக்கள் அதிர்ச்சி!

Comments Off on நியூயார்க் சிட்டியில் திடீர் நிலநடுக்கம்; மக்கள் அதிர்ச்சி!

நேற்று திடீரென நியூயார்க் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் சில நாடுகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அவ்வகையில் நேற்றிரவு திடீரென ரிக்டர் அளவில் 4.8 என நியூயார்க் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும் இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க்கில் ஏற்கனவே விண்ணை முட்டும் கட்டிடங்கள் பல […]

Continue reading …

காலரா பரவல் புரளியால் 96 பேர் பலி!

Comments Off on காலரா பரவல் புரளியால் 96 பேர் பலி!

மொசாம்பிக் நாடு உலகில் வறுமையில் வாடும் நாடு. இந்நாட்டில் எரிவாயு வளம் அதிகம் கொண்ட நாடாக உள்ளது. இருந்த போதிலும் இங்கு, 3-ல் 2 பங்கு மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதில் இருந்து மீள முயன்று கொண்டிருந்த மக்களுக்கு எதிராக கடந்த 2017ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஊடுருவி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இரு தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் இதுவரை 5 ஆயிரம் […]

Continue reading …

கோவையில் களமிறங்கிய சபரீசன்!

Comments Off on கோவையில் களமிறங்கிய சபரீசன்!

அண்ணாமலை கோவை தொகுதியில் ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக சபரிசன் களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்க திமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்படுவதாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் பாஜக தொண்டர்கள் கோவை தொகுதி முழுவதும் துண்டு நோட்டீசுகளை கொடுத்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த அளவுக்கு திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் இல்லை என்றும் கூறப்படுகிறது. கோவை தொகுதியில் திமுக தேர்தல் பொறுப்பாளர்களாக ஏற்கனவே […]

Continue reading …

ஓட்டு கேட்டு கிராமத்திற்கு வர வேண்டாம்!

Comments Off on ஓட்டு கேட்டு கிராமத்திற்கு வர வேண்டாம்!

ஓட்டு கேட்டு எந்தக் கட்சியினரும் கிராமத்திற்கு வர வேண்டாம் என்று திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே என்று மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தேர்தலின்போது மக்கள் வேட்பாளர்களிடமும் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கும் விஷயம். ஆனால், அது குறைகின்றபோதும், நிவர்த்தி செய்யப்படாதபோதும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குழிப்பட்டி மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. மலைவாழ் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ […]

Continue reading …

மயிலாடுதுறையில் ஒரு வாரமாக சிக்காமல் இருக்கும் சிறுத்தை!

Comments Off on மயிலாடுதுறையில் ஒரு வாரமாக சிக்காமல் இருக்கும் சிறுத்தை!

கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தை பிடிபடாமல் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட எல்லையான காஞ்சிவாய், பேராவூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக தகவல் வெளியானது. அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவில் தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். சிறுத்தையை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கையை வனத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். சிறுத்தை தென்படுவதாக கூறிய […]

Continue reading …

பாஜகவில் இணைந்த தமிழ் காமெடி நடிகை!

Comments Off on பாஜகவில் இணைந்த தமிழ் காமெடி நடிகை!

இன்று தமிழ் காமெடி நடிகை தனது கணவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன் பாஜகவில் இணைந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஆர்த்தி. இவர் தனுஷின் “படிக்காதவன்” உட்பட பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார். நடிகை ஆர்த்தி கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது மறைவிற்குப் பின் அதிமுகவிலிருந்து விலகி அரசியலில் இருந்தும் விலகி இருந்தார். தற்போது திடீரென அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் […]

Continue reading …

நடுக்கடலில் கொலை வெறி தாக்குதல்!

Comments Off on நடுக்கடலில் கொலை வெறி தாக்குதல்!

இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்கியதோடு மீன்பிடி வலைகளை அறுத்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. ராமேஸ்வரத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் […]

Continue reading …

சமோசாவுக்குள் பீஃப்; 6 பேர் கைது!

Comments Off on சமோசாவுக்குள் பீஃப்; 6 பேர் கைது!

சமோசாவில் மாட்டுக்கறி கலந்து விற்பனை செய்த ஐந்து பேர் குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் வதேரா பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சமோசாவில் மாட்டு இறைச்சி சேர்ந்து விற்பனை செய்ததற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தயாரித்த சமோசா பரிசோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பிய காவல்துறையினர் ஆய்வு முடிவில் சமோசாவில் மாட்டு இறைச்சி கலந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடமை உரிமையாளர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலீசார் மேற்கொண்ட விசாரணையில் […]

Continue reading …

கூரியர் வேனில் 11 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!

Comments Off on கூரியர் வேனில் 11 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!

பறக்கும் படை அதிகாரிகளால் விருதுநகர் மாவட்டத்தில் கூரியர் வேன் ஒன்றில் 11 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் ஆணையம்தகுந்த ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே கூறியுள்ளது. அவ்வகையில் விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டிபட்டி பகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கூரியர் வேனை தடுத்து நிறுத்து சோதனை செய்தனர், […]

Continue reading …

சென்னை -நெல்லை ரயில் குறித்த விவரங்கள்!

Comments Off on சென்னை -நெல்லை ரயில் குறித்த விவரங்கள்!

தெற்கு ரயில்வே சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. கோடைக்கால விடுறையாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் வாரந்தோறும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு […]

Continue reading …