27 இடங்களில் தேசிய புலளாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை.

Filed under: தமிழகம் |

சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, விருத்தாச்சலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 27 இடங்களில் தேசிய புலளாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. . அதேபோல் திருச்சி கூனிபஜார் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரின் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. அஷ்ரப் அலி அவர் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். நிதி வசூல், மூளை சலவை செய்தல், உபகரணங்கள கொடுத்து உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது.