பத்திரிக்கையாளர் போர்வையில் மிகவும் கீழ்தரமாக ஈடுபடுபவர்களுக்கு தேனி டிஸ்ட்ரிக் பிரஸ் கிளப் எச்சரிக்கை.

Filed under: தமிழகம் |

பத்திரிக்கையாளர் போர்வையில் மிகவும் கீழ்தரமாக ஈடுபடுபவர்களுக்கு தேனி டிஸ்ட்ரிக் பிரஸ் கிளப் எச்சரிக்கை.

தேனி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் தலைவர் (பொறுப்பு)சிவா ஆண்டவர் செல்வகுமார், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொருளாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் குறித்து அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களையும் குறிப்பிட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், செய்திகளையும் வெளியிட்டு வரும் நபர்கள் மீதும்,அதனை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர்கள் மீதும் உரிய குற்ற நடவடிக்கை எடுக்கும்படி சங்கத்தின் சார்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எங்கள் சங்கத்தின் வளர்ச்சி பிடிக்காமல் ஒரு சில நபர்கள் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் ஒரு சிலர் உண்மை என்னவென்று தெரியாமல் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து குற்றவாளிகளுக்கு துணை புரிந்து வருகின்றனர்.அவர்கள் அனைவர் மீதும் சட்டப்படி விரைவில் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் எங்கள் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் சங்கத்தின் சார்பாக மாபெரும் போராட்டங்கள் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும், அவதூறு செய்தியை வெளியிட்டவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் மீது விரைவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்பதையும் எங்கள் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.