கள்ளகாதலியை தேடி தேனி மாவட்டம் வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் அறையினுள் நுழைய முயன்ற இளைஞர் கைது…!

Filed under: தமிழகம் |

கள்ளகாதலியை தேடி தேனி மாவட்டம் வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் அறையினுள் நுழைய முயன்ற இளைஞர் கைது…!

தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் செலுத்திய வாக்கு பெட்டிகள் அனைத்தும் தேனி அரண்மனை புதூர் அருகே உள்ள கம்மவர் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புகளுடன் மிகவும் நேர்த்தியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.வாக்குகள் எண்ணுவதற்கு இன்னும் ஒரு மாத கால அவகாசமே உள்ள நிலையில் இன்று சுமார் 10:30 மணி அளவில் .22 வயது மதிக்கத்தக்க செல்வம் மகன் ராஜேஷ் கண்ணா என்னும் பெயர் கொண்ட சின்னமனூர் சீப்பாலை கோட்டை ராஜா தெரு சார்ந்த இளைஞர் ஒருவர் அத்துமீறி வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்துள்ளார்,

அவரை பிடித்து விசாரித்த போது தனது கள்ளகாதலியை பார்க்க வாந்ததாக கூறியுள்ளர். மூன்றடுக்கு பாதுகாப்பை தாண்டி கள்ளகாதலியை பார்க்க வந்ததாக கூறியுள்ளார் அந்த பிடிபட்ட இளைஞர், VAO மதுக்கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று அடுக்கு பாதுகாப்பையும் தாண்டி பலத்த பாதுகாப்போடு நடந்தேறிய கள்ளக்காதல் கதை தற்போது கம்பியின் பின்னால் முடிவுக்கு வந்துள்ளது….