ஆசிரியர்களுக்கான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

பள்ளிக்கல்வித்துறை அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தின விழாவாக நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெறும் அசிரியர்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அரசியல் கட்சிகளுடம் தொடர்பில் இருந்தால் விருது பரிந்துரையில் இடம்பெறாது. வணிக ரீதியில் கற்பிக்கும் ஆசிரியர்களும் விருது பெறத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.