கரூர் 4 வழிச்சாலைக்கு ரூ.137 கோடி!

Filed under: தமிழகம் |

தற்போது கரூரில் இருக்கும் இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்வதற்காக தமிழ்நாடு அரசு ரூ.137கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு வைரமடையிலிருந்து கரூர் வரை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இச்சாலை மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்கும், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் உற்பத்தி பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது. கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, கோவை, ஊட்டி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் இச்சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதை அடுத்து இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையை நான்கு வழிசாலையாக அகலப்படுத்த 137.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.