காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் மரணம்!

Filed under: உலகம் |

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இன்று காலையில் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டம் கண்டி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் பதுக்கிவைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரி உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பிற்காக ரஜோரி மாவட்டத்தில், இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.