கே.எஸ்.அழகிரி கேலி!

Filed under: அரசியல் |

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி “தமிழக பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள்” என்று கிண்டலடித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி நெல்லையில் நிர்வாகிகள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, “தமிழக ஆளுநர் ரவி மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார். அண்ணாமலை விளம்பரத்திற்காக முரண்டான தகவல்கள் கூறி வருகிறார்” என்றார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் பாஜகவிற்கு 2 தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கட்சி மேலிடத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஆளுங்கட்சியில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி பல ஆதாரங்களையும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வைத்தார். சமீபத்தில் திருக்குறளுக்கு உரை எழுதிய ஜியுபோல் உரையில் ஆன்மீக கருத்துகளை நீக்கிவிட்டதாக விமர்சித்தார்.