கோவிட்-19 குறித்து அமெரிக்க ஆய்வாளர் பகீர் தகவல்!

Filed under: இந்தியா,உலகம்,தமிழகம் |

வூஹான் மாகாண ஆய்வுகூடத்தில் பணியாற்றிய நபர் தன் புத்தகத்தில் கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு சீன தேசத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் கொரோனா தொற்றுப் பரவியது. இதனால், உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணகான மக்கள் உயிரிழந்தனர். கொரொனாவின் உருமாறிய வைரஸ் மேலும் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதன் 5ம் அலை விரைவில் பரவலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. சீனாவில் மீண்டும் கொரொனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், குளிர்காலம் என்பதாலும், பண்டிகை காலம் என்பதாலும், பல நாடுகளில் மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக WHO கூறியுள்ளது. சீனா நாட்டில் வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றி வந்த அமெரிக்க ஆய்வாளர் ஆண்ட்ரூ ஹாஃப், தன் The Truth About Wuhan
என்ற புத்தகத்தில், கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்ற உண்மையைத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வைரஸ் சீனா ஆய்வகததில் அமெரிக்க நாட்டின் நிதி உதவியுடன் தான் செய்யப்பட்டது என்றும் அப்போது, போதிய ஆய்வக மேம்பாட்டிற்கு நிதி வசதி இல்லாததால் வைரஸ் அங்கிருந்து கசிந்து, உலகம் முழுவதும் பரவிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.