நாளை சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்!

Filed under: சென்னை |

நாளை மெகா வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. வேலையில்லாத இளைஞர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள நியூ கல்லூரியில் நாளை அதாவது அக்டோபர் 15ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் தகுதியான நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இளைஞர்களை வேலைக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே நாளை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலையில்லாத இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது,