பாப்புலர் ப்ரண்ட் ஆப்பின் இணையதளம் முடக்கம்!

Filed under: இந்தியா,தமிழகம் |

இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் புகார்கள் கூறப்பட்டன, இந்நிலையில் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இச்சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அந்த அமைப்பு ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இணைய தளத்தையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.