பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் புதிய திட்டம் அறிமுகம்!

Filed under: தமிழகம் |

புதிதாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு தரைவழி தொலைபேசி எண் மற்றும் அதிவேக இன்டர்நெட் மற்றும் அளவில்லா அழைப்பு வழங்கப்படும். அதுமட்டுமின்றி இச்சலுகைத் திட்டத்தில், 6 மாதங்கள் வரை கட்டணத்தில் ரூ.200 தள்ளுபடி செய்யப்படும்.

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு 6 மற்றும் 12 மாத சந்தா செலுத்தினால் வைபை ஆப்டிகல் மோடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் நிறுவுவதற்கான கட்டணம் ரூ.500 ரத்து செய்யபப்டும். பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பில் சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் ரூ.999 திட்டத்தின்கீழ், 300-க்கும் மேற்பட்ட டிவி சேனல், 500-க்கும் டிவி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். இத்திட்டங்கள் குறித்து கூடுதல் விவரங்கள் அறிய https://bookmyfiber.bsnl.co.in என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.