பேத்திகளால் எரித்து கொல்லப்பட்ட பாட்டி!

Filed under: தமிழகம் |

தன் பாட்டியையே எரித்துக் கொலை செய்த பேத்திகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 90 வயது மூதாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்கால் அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவரது பேத்திகள் மாரியம்மாள், மேரி ஆகிய இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, பாட்டியை எரித்ததை பேத்திகள் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.