மீன் கடைகளை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!

Filed under: சென்னை |

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் இருந்த மீன் கடைகள் அகற்றப்பட்டது குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் சாலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் இதை அரசியலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சந்தை கட்டுமானம் முடியும் வரை சாலையின் மேற்கு பக்கம் தற்காலிகாலிக கடைகள் அமைக்கப்படுவதாகவும் அந்த கடைகள் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி உறுதி அளித்துள்ளது.