முன்னாள் கிரிக்கெட் வீரரின் ஆவேசம்!

Filed under: விளையாட்டு |

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா “நாங்கள் என்ன இந்தியாவின் பணியாளர்களா?” என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதையடுத்து இப்போட்டியில் இந்தியா கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரமீஸ் ராஜா, “பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்றும் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் இந்தியா கூறுவதை பார்க்கும் போது நாங்கள் என்ன இந்தியாவின் பணியாளர்களா? என்றுதான் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. அவர்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்க வேண்டுமா? பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது சிறப்பாக விளையாடி வருவதாகவும் வீரர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்” என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.