எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான்…விராட் விளக்கம்

Filed under: Uncategory,இந்தியா,விளையாட்டு |

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோற்கடித்தது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேற்றப்பட்டது. ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத அணியாக இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கோப்பை வெல்லும் கனவு இந்த முறையும் கனவாகவே போய்விட்டது.

தோல்விக்குப் பிறகு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது.. நாங்கள் போதிய அளவு ரன்கள் எடுக்கவில்லை, வில்லியம்சன் கொடுத்த கேட்சை பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும்.

முதல் இன்னிங்ஸில் ஏராளமான நெருக்கடிகளை எங்களுக்கு சன்ரைசர்ஸ் அணியினர் கொடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் விரைவாக எங்கள் அணி விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம். அதுமட்டுமில்லாமல் நாங்கள் போதுமான ரன்கள் அடிக்காமல் இருந்ததும் தோல்விக்கான காரணமாக அமைந்தது.

இந்தத் தொடரில் நல்ல விஷயம் என்னவென்றால் படிக்கல் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். முதல் தொடரிலேயே 400 ரன்களுக்கு மேல் குவித்து, சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்து திறமையை நிரூபித்து காட்டியுள்ளார். அவரை நினைத்துப் மிகவும் பெருமைப்படுகிறேன்.

சாஹல், டிவில்லியர்ஸ் இருவரிடம் இருந்தும் எப்போதும் சிறப்பான ஆட்டங்களை காண முடியும். உள்நாட்டில் ஐபிஎல் போட்டி நடக்காமல் வெளிநாட்டில் நடந்ததால்தான் இந்த அளவுக்குக் கடும் சவாலாக மாறியுள்ளது. ஐபிஎல் அணிகளின் வலிமையையும் இந்தத் தொடர் எடுத்துக் காட்டியுள்ளது.

ஒவ்வொரு அணியிலும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். எந்தப் போட்டியும் யாருக்கும் சாதகமாக இல்லாமல், கடும் சவாலாகவே இருந்தது. ஒவ்வொரு ஆண்டு போல இந்த ஆண்டும் எங்களுக்கும் ஆதரவளித்த எங்கள் ரசிகர்களுக்கு அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார் விராட் கோலி.