மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை!

Filed under: இந்தியா |

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று காலை 11.00 மணிக்கு, விடுத்துள்ள புயல் எச்சரிக்கை,

மேற்குவங்க கடலில் மையம் கொண்டள்ள உம்-பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா) வுக்கு 480 கீ.மீ தொலைவிலும், தெற்கு – தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 630 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென் – மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 750 கி.மீ தொலைவிலும் இன்று காலை 8.30 மணிக்கு மையம் கொண்டிருந்தது.

இது வங்கக் கடலின் வடமேற்குக்கு குறுக்கே வடக்கு – வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் – வங்கதேசம் கடலோரப் பகுதியில் திகா(மேற்கு வங்கம்) மற்றும் ஹதியா தீவுகள் (வங்க தேசம்) அருகே சுந்தர்பன்ஸ் பகுதியில் மே 20ம் தேதி மதியம்/ மாலை அதி தீவிர புயலாக மணிக்கு அதிகபட்சம் 165 195 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் எனத் தெரிகிறது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டோப்ளர் வானிலை ரேடார் மூலம் உம்-பன் கடும் சூறாவளிப் புயல்  தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.