ரயிலை தாக்கினால் 5 ஆண்டு சிறைத்தண்டனை!

Filed under: இந்தியா,தமிழகம் |

வந்தே பாரத் இந்திய நகரங்களுக்கு இடையே செல்லும் அதிவிரைவு ரயில்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் சென்னை ஐசிஎஃபி-ல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி இந்த வந்தே பாரத் விரைவு ரயில் (டில்லியிலிருந்து வாரணாசி வரையிலான) சோதனை ஓட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இந்த வந்தே பாரத் ரயில்கள் மீது பயணிகள் கல்வீசித் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகின்றன. வந்தே பாரத் ரயில்கள் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தி, சேதம் விளைவிப்போருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. “சமீப காலமாக வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் மட்டும் 9 சம்பவங்கள் நடந்துள்ளதால், இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளது. மேலும், வந்தே பாரத் ரயில்கள் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தி, சேதம் விளைவிப்போருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.