ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார்

Filed under: அரசியல் |

ராஜபக்சேவின் மகன்களில் ஒருவரான நாமல் ராஜபக்ச, “பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டார்” என தெரிவித்துள்ளார்.

ஒரு பேட்டியின் போது மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டார் எனவும், தனக்குப் பின்வருபவரை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் நாமல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரை வெளியே வருமாறு கோரி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ள வேளையிலேயே நாமல்லின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.