வங்கக் கடலில் உருவாகிறது ‘குலாப்’ புயல்

Filed under: தமிழகம் |

சென்னை, செப் 25:

‘வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் ‘குலாப்’ புயல் உருவாகும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற உள்ளதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குலாப் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், தெற்கு ஓடிசா – வடக்கு ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.