இத்திரைப்படம் இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்; நிர்மலா சீதாராமன்!

Filed under: அரசியல்,சினிமா |

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் “காந்தாரா” திரைப்படத்தை பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் மொத்தம் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த படம் வெறும் 20 கோடி செலவில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை நேற்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்தார். அதன் பிறகு அவர் இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த படம் நமது இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் படமாக அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் படம் பார்த்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.