இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

Filed under: தமிழகம் |

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தென்மேற்கு பருவமழையை விட ஆறு சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “கடந்த 24 மணி நேரத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூர் பகுதியில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை தென்மேற்கு பருவமழை இயல்பை விட ஆறு சதவீதம் அதிகம் பெய்துள்ளது. மேலும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளதை அடுத்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மாறி உள்ளது.