கரூரில் போதையில் மாணவிகள்!

Filed under: தமிழகம் |

மது அருந்திய நிலையில் பள்ளி மாணவிகள் ரோட்டில் மயங்கி நிலையில் கிடந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

11ம் வகுப்பு படிக்கின்ற கரூரைச் சேர்ந்த அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முன்னதாக நடந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மறுதேர்வு எழுத வேறு ஒரு பள்ளிக்கு சீருடையில் சென்றதாக கூறப்படுகிறது. தேர்வு எழுதி முடித்ததும் மதுபானக்கடைக்கு சென்ற மாணவிகள் அங்கு ஒயின் வாங்கி குடித்ததாக தெரிகிறது. பின்னர் வீடு திரும்பிய மாணவிகள் போதை தலைக்கேறியதால் கரூர் சர்ச் கார்னர் பகுதியில் நடுரோட்டிலேயே போதையில் கிடந்துள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்கள் உடல்நலமில்லாமல் இருப்பதாக நினைத்து ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது அவர்கள் மது போதையில் இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவர்களை அங்குள்ள மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். பள்ளி மாணவிகள் மூவரும் ஒயின் குடித்தால் உடல் நிறம் வெள்ளையாக மாறும் என ஆசைப்பட்டு குடித்ததாக கூறியுள்ளனர். பின்னர் அவர்களின் பெற்றோரை அழைத்து மாணவிகளை அவர்களிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.