சாலை போடுவதில் கின்னஸ் சாதனை!

Filed under: இந்தியா |

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 75 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை 105 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

அமராவதி மற்றும் அகோலா இடையே 75 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மிகவும் குறைந்த நேரத்தில், அதாவது 105 மணி 33 நிமிடங்களில் அமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

NHAI-ன் 800 பணியாளர்கள் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 720 பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து பணிபுரிந்து இச்சாதனையை முடித்துள்ளனர். சாலை அமைக்கும் பணி ஜூன் 3ம் தேதி காலை ஏழு மணிக்கு துவங்கி ஜூன் 7ம் தேதி மாலை 5 மணிக்கு முடிந்தது. அமராவதி -அகோலா பகுதி தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு பகுதியாகும். ஒரு முக்கியமான கிழக்கு – மேற்கு வழித்தடம். கனிம வளங்கள் நிறைந்த பகுதி வழியாக செல்லும் இந்த சாலை கொல்கத்தா, ராய்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை ஒன்றாக இணைக்கிறது. இச்சாதனையின் மூலம் பிப்ரவரி 27, 2019 அன்று பதிவு செய்யப்பட்ட கத்தாரில் உள்ள பொதுப்பணித்துறை ஆணையமான NHAI-ன் சாதனையை ழிபிகிமி முறியடித்துள்ளது. இந்த சாலை அல்-கோர் விரைவுச்சாலையின் ஒரு பகுதியாக இருந்தது. இது 10 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது.