சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளிவந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கார் வெடிகுண்டு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில் இச்சம்பவத்துடன் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னையிலுள்ள 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய 18 பேரின் இருக்கும் ஐந்து இடங்களில் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
மேக்கேத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ...
நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது; பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு நயன்தாரா ஆழ்ந்த இரங்கல்!
நடிகர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல்!
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!



